Last Updated:Feb 10, 2026 10:12 PM IST
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகை தான் இரண்டாவது முறையாக தாயாக இருப்பதை அறிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பூர்ணா.
கடந்த 2004-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுபோலொரு பெண்குட்டி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ‘ஹிருதயத்தில் சூஷிக்கன்’ படத்தில் நடித்தார்.
‘ஜூனியர் சீனியர்’ என மலையாளத்தில் கனவம் செலுத்தி வந்தவர், 2007-ல் வெளியான ‘ஸ்ரீமஹாலட்சுமி’ படத்தின் மூலம் தெலுங்கில் நடிகையாக அறிமுகமானார்.
2008-ல் பரத் நடிப்பில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘கொடைக்கானல்’, ‘கந்த கோட்டை’, ‘துரோகி’, ‘ஆடு புலி’, ‘வேலூர் மாவட்டம்’, ‘வித்தகன்’ ஆகியபடங்களில் நடித்தார்.
ரவி மோகனின் ‘சகலகலா வல்லவன்’, சசிகுமாரின் ‘கொடிவீரன்’, மிஷ்கின் - ராம் நடித்த ‘சவரக்கத்தி’ ஆகிய படங்களில் நடித்தவர், 2019-ம் ஆண்டு வெளியான சூர்யாவின் ‘காப்பான்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படத்தில் நடித்திருந்தார். ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் வெளியான விசித்திரன் படத்தில் நடித்திருந்தார்.
கடைசியா 2004-ம் ஆண்டு வெளியான ‘டெவில்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2022-ம் ஆண்ட ஷாயித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் 36 வயதாகும் பூர்ணா தற்போது இரண்டாவது முறையாக தாயாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சாதி பெயரை குறிப்பிட்டு ஆவேசமாக பேசிய இளம்பெண்.. வைரல் வீடியோ
உத்தரபிரதேச கான்பூரில் வங்கியிலுள்ள ஆஸ்தா சிங் சாதி பெயரை கூறி ஆவேசமாக பேசிய வீடியோ வைரல்
ஆஸ்தாவின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர், வங்கி தரப்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை
ஆஸ்தா விளக்கத்தில் வாடிக்கையாளர் வாக்குவாதம் இல்லை, சாதி பேச்சில் பெருமை என்றும் கூறினார்.
.png)








English (US) ·