CM Vijay : இதை ஏற்க முடியாது.. மக்கள் கடும் பாதிப்பு.. ஒன்றிய அரசை உலுக்கிய விஜய்யின் கடிதம்!

1 hour ago 9

தமிழக முதலமைச்சர் விஜய் தற்போது அதிரடியான கடிதத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் முதலமைச்சர் விஜய். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.3 வீதம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த உடனேயே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் நேரங்களில் பொதுமக்களுக்கு பலன் கிடைப்பதில்லை, எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன என்றும் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தினசரி இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்களை பயன்படுத்தும் குடும்பங்களின் மாதச் செலவு இதனால் அதிகரிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Read Entire Article