Last Updated:May 10, 2026 7:23 PM IST
EB BILL | தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 48 லட்சம் வீட்டு இணைப்புகள் உள்ள நிலையில், இரண்டு கோடி நுகர்வோர்கள் தற்போது வரை 500 யூனிட்டுக்கு கீழ் தான் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.

500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அளிக்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சராக பதவியேற்ற விஜய், 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு இனி 200 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில் 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாரணையில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இரு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு மாதங்களுக்கு 500 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் வரை கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அதற்காக செலவாகும் ஆயிரத்து 730 கோடி ரூபாய், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை புதிய கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 48 லட்சம் வீட்டு இணைப்புகள் உள்ள நிலையில், இரண்டு கோடி நுகர்வோர்கள் தற்போது வரை 500 யூனிட்டுக்கு கீழ் தான் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)







English (US) ·