Last Updated:May 10, 2026 10:25 AM IST
முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை பதவிகளை தன் வசம் வைத்துக் கொள்ள உள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்றுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
முன்னதாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக பெரும்பான்மையை பெற்றது. தொடர்ந்து தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் அவருடன் இன்று முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
அந்தவகையில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
இவர்களில் பொதுப்பணித்துறை அமைச்சராக செங்கோட்டையன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக என்.ஆனந்த், மின்சாரத்துறை அமைச்சராக நிர்மல்குமார் ஆகியோர் நியமிக்கப்படுவர் என சொல்லப்படுகிறது.
இதேபோல விளையாட்டு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக ஆதவ் அர்ஜூனாவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக ராஜ்மோகனும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக முஸ்தபாவும் நியமிக்கப்படுவர் என தெரிகிறது.
மேலும் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக அருண் ராஜ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக வெங்கட்ரமணன் ஆகியோர் பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பதாக சொல்லப்படுகிறது.
முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை பதவிகளை தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார். மேற்கொண்டுள்ள மற்ற துறைகளுக்கான அமைச்சரவையில், தவெக உடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)






English (US) ·