Vijay: `கடல் வற்றும் வரை விஜய் மீது நான் கொண்டுள்ள அன்பு நிலைத்திருக்கும்!'- நெகிழும் நடிகர் ஶ்ரீமன்

1 hour ago 11

விஜய்யுடன் தொடர்ந்து பயணித்து வந்த ஸ்ரீமனிடம் விஜய் முதல்வராகப் பதவியேற்ற பிறகு பேசினோம்.

Published:15 mins agoUpdated:15 mins ago

நடிகர் ஶ்ரீமன் - விஜய்

நடிகர் ஶ்ரீமன் - விஜய்

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். பல போராட்டங்களைத் தாண்டி இன்று காலை முதல்வராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய்.

விஜய்யுடன் நெருக்கமாக சினிமாவில் பல காலம் பயணித்த அவருடைய நண்பர்கள் பலரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

முதல்வர் ஜோசப் விஜய்

முதல்வர் ஜோசப் விஜய்முதல்வர் ஜோசப் விஜய்

அந்த வகையில், நடிகர் ஸ்ரீமனும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு, நண்பனின் பதவியேற்பு விழாவைக் கண்டு பயங்கர உற்சாகமடைந்தார்.

விஜய்யுடன் தொடர்ந்து பயணித்து வந்த ஸ்ரீமன், விஜய் விக்கிரவாண்டியில் நடத்தியிருந்த முதல் மாநாட்டிலேயே கலந்துகொண்டார். விஜய் பதவியேற்ற பிறகு, ஸ்ரீமனிடம் பேசினோம்.

நம்மிடையே பேசிய நடிகர் ஸ்ரீமன், "விஜய் இத்தனை போராட்டத்தைத் தாண்டி வந்திருக்கார்னு சொல்கிறார்கள். ஆனால், இதை நான் ஒரு போராட்டமா பார்க்கல.

மக்களுக்கு நல்லது பண்ணனும்னு வரும்போது, சில இடையூறுகள் வரும். அதைத் தாண்டிப் போகும்போது சுகமாக இருக்கும். அதைத் தாண்டுறதுக்குதான் கொஞ்சம் நேரம் எடுத்தது.

நடிகர் ஶ்ரீமன் - விஜய்

நடிகர் ஶ்ரீமன் - விஜய்

அந்த டைம் முடிஞ்ச உடனே அழகாகவும் இருந்தது. நல்ல பிரமாதமான ஒரு வரவேற்பும் இருந்தது. ஃபைனலா எதுவாக இருந்தாலும் சார், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

என்னுடைய நண்பர் விஜய் முதல்வரானதைப் பற்றி என்னுடைய சந்தோஷத்தைச் சொல்லணும்னா 'ஸ்கை இஸ் த லிமிட்' (Sky is the limit). எனக்கு அதுக்கு மேல வேற எதுவும் சொல்றதுக்கும் இல்லை, வார்த்தைகளும் இல்லை.

கடல் வற்றும் வரை அவர் மீது நான் கொண்டுள்ள அன்பு நிலைத்திருக்கும். அவ்வளவுதான்" என்றவரிடம், "முதல்வர் விஜய்யின் ஆட்சி எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு உங்களிடம் இருக்கிறது?" எனக் கேட்டதற்கு, "எதிர்பார்ப்பு ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

ஒரே வீட்ல பிறந்த மூணு குழந்தைகளுக்கு அப்பா, அம்மாகிட்ட எதிர்பார்ப்பு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

நடிகர் ஶ்ரீமன் - விஜய்

நடிகர் ஶ்ரீமன் - விஜய்

அதனால், கொஞ்சம் வளரும்போதுதான் நம்ம எதிர்பார்ப்புகள் என்ன, நான் இதை எதிர்பார்த்திருந்தேன் அப்படின்னு சொல்றதுக்கு ஒரு நேரம் வேணும் இல்லையா?

அந்த அவகாசம் நமக்குக் கொடுத்ததுக்கு அப்புறம்தான் நம்மளால இதுக்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும்" என்றார் உற்சாகத்துடன்.

Read Entire Article