
புதுடெல்லி: மே 9 –
நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி.ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்கியது. இதில் 150 பயணிகள் மற்றும் மாலுமிகள் உட்பட 72 ஊழியர்கள் இருந்தனர். அண்டார்டிகா மற்றும் தெற்கு அட்லான்டிக் பகுதிகளின் தீவுகளுக்கு சொகுசு கப்பல் பயணம் மேற்கொண்டது. புறப்பட்ட சில நாட்களிலேயே 3 பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து மேற்கு ஆப்பிரிக்க கடற்கரை பகுதியில் முகாமிட்டிருந்த சொகுசுக் கப்பல் தற்போது நெதர்லாந்தின் டெனெரிப் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அங்கு பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஹன்டா வைரஸ் பாதிப்பு இல்லாத பயணிகள் மட்டும் அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
தற்போதைய சூழலில் 2 இந்தியர்கள் உட்பட சுமார் 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இவர்கள் சொகுசுக் கப்பலின் ஊழியர்களாகப் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “எலிகள் மூலம் மனிதர்களுக்கு ஹன்டா வைரஸ் பரவுகிறது. குறிப்பாக எலிக் கழிவுகள் படிந்த இடங்களைச் சுத்தம் செய்யும்போது மனிதர்களுக்கு வைரஸ் பரவுகிறது.
மேலும் எலிக் கழிவுகளின் நுண்துகள்கள் காற்றில் கலந்து, அவற்றை சுவாசிப்பதன் மூலமும் ஹன்டா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை. எனினும் இது கரோனா வைரஸ் போன்று பரவ வாய்ப்பில்லை’’ என்றனர். மத்திய அரசின் ஐசிஎம்ஆர் இயக்குநர் டாக்டர் நவீன் குமார் கூறும்போது, “ஹன்டா வைரஸால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை. வெளிநாட்டு சொகுசுக் கப்பலில் 2 இந்தியர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை’’ என்று தெரிவித்தார்.
.png)
50 minutes ago
11






English (US) ·