சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அமமுக எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை என்றும், தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தவெக தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோ குறித்துப் பேசிய அவர், காமராஜ் காரில் அமர்ந்து கையெழுத்திடுவது போன்ற அந்த வீடியோ 'ஏ.ஐ' (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோவாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பினார். அந்த வீடியோவில் உள்ள அசல் கடிதம் எங்கே? என்று கேள்வி எழுப்பிய அவர், காமராஜ் உண்மையிலேயே ஆதரவு அளித்திருந்தால் அவரை ஏன் ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றும் வினவினார். தவெகவினர் திமிரோடும் வன்மத்துடனும் செயல்படுவதாகவும், தனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாகக் கூறி தங்களது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் சாடினார். விஜய் 108 இடங்களை வென்றிருந்தாலும் தங்களுக்கு கவலையில்லை என்றும், முதலமைச்சர் ஆவதற்காக விஜய் இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவதாகவும் தினகரன் குற்றம் சாட்டினார். தவெகவின் இத்தகைய செயல்கள் தன்னை மிரட்டும் முயற்சி என்றும், இதற்கு அந்த கட்சி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
.png)
1 hour ago
10





English (US) ·