திருச்சி: வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் - முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதா கைது!

4 hours ago 17

மணப்பாறை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published:3 mins agoUpdated:3 mins ago

ஹேமலதா

ஹேமலதா ( d.dixith )

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், பாம்பாட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி ( 30) என்பவரின் தந்தை கருப்பசாமி சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அவர் அரசு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த மனு தொடர்பாக வி.பெரியப்பட்டி பிர்கா முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவை அணுகியபோது, மனுவை விரைந்து பரிசீலித்து சான்றிதழ் வழங்குவதற்காக முதலில் ரூ.5,000 லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது.

பின்னர், புகார்தாரரின் வேண்டுகோளின் பேரில் ரூ.4,000 ஆக குறைத்து கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லஞ்சம் வழங்க விருப்பமில்லாத ஈஸ்வரி, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரை ஆய்வு செய்த அதிகாரிகள், வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்பு பொறிவைப்பு நடவடிக்கைக்கு திட்டமிட்டனர்.

அதன்படி, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் தனிப்படை அதிகாரிகள் இணைந்து வி.பெரியப்பட்டி பிர்கா அலுவலகத்தில் பொறிவைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ri

rid.dixith

அப்போது, புகார்தாரரிடம் இருந்து ரூ.4,000 லஞ்சத் தொகையை ஹேமலதா பெற்றுக்கொண்ட உடனேயே, அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதோடு, லஞ்சமாக பெறப்பட்ட பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஹேமலதாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

மேலும், அவரது இல்லத்திலும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். லஞ்சம் பெற்ற வழக்கில் வருவாய் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Read Entire Article