திருவாரூர்: தலைக்கேறிய கஞ்சா போதை; தாத்தா பாட்டியை கொன்று தீ வைத்த பேரன்!

1 hour ago 10

உயிர் பிரிந்த நிலையிலும் ஆக்ரோஷம் தீராத போதை அரக்கன் அவர்களின் உடலை எண்ணெய் ஊற்றி எரித்து, தீ-க்கு இறையாக்கினார்.

Published:Just NowUpdated:Just Now

கொலை நடந்த இடம்

கொலை நடந்த இடம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் வடுவூர் காரக்கோட்டை புதுத்தெருவில் முத்து(73)-சந்திரா(70) தம்பதியினர் வசித்து வந்தனர்.

இவர்களுக்கு கலியபெருமாள் என்ற மகனும், அய்யப்பன்(30) என்ற பேரனும் உள்ளனர்.

கலியபெருமாள் மனைவி தேவியிடம் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பல ஆண்டுகாலமாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் காரக்கோட்டை இந்திராநகர் பகுதியில் மனைவி தேவியும் மகன் அய்யப்பனும் வசித்து வந்தனர்.

பொறியியல் பட்டதாரியான அய்யப்பன் வேலைவாய்ப்பற்ற நிலையில் மன உளச்சலில் கஞ்சா போதைக்கும் அடிமையாகி உள்ளார். இதனால் பல மதுபோதை ஆசாமிகளுடன் அவ்வப்போது அலைபேசியில் உரையாடுவதும், தந்தையிடம் இதற்காக பணம் கேட்பதுமாகவே இருந்தது இவரின் போக்கு.

அய்யப்பன்

அய்யப்பன்

போதைக்கு அடிமையான மகனை மீட்கும் நோக்கத்தில் அய்யப்பனின் தந்தை ஒரு கட்டத்தில் பணம் அனுப்புவதை நிறுத்துவிட்டார். தந்தை பணம் அனுப்பாமல் இருப்பதற்கு தாத்தா பாட்டிதான் காரணம் என எண்ணி தாத்தா பாட்டியின் வீட்டுக்குச் சென்று அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார் பேரன் அய்யப்பன்.

இந்நிலையில் தான் நேற்றைய தினம் அதிகாலை தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்ற கஞ்சா ஆசாமி அய்ப்பன், அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மதிமயங்கிய போதையில் தனது தாத்தா மற்றும் பாட்டியை பீர் பாட்டிலால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்தும் மனசாட்சியின்றி கடுமையாக தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

உயிர் பிரிந்த நிலையிலும் ஆக்ரோஷம் தீராத போதை அரக்கன் அவர்களின் உடலை எண்ணெய் ஊற்றி எரித்து, தீ-க்கு இறையாக்கினார்.

பிறகு வீட்டிற்கு சென்ற அவர், தன் தாய் தேவியிடம் செய்த கொலையை சர்வசாதாரணமாக கூறியுள்ளார். அதனைக்கேட்ட தாய்‌ அதிர்ச்சியில் உறைந்தார். இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தலைக்கேறிய கஞ்சா போதை; தாத்தா பாட்டியை கொன்று தீ வைத்த பேரன்!

இதுகுறித்து தகவல் அறிந்த வடுவூர் காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அய்யப்பனின் தாய் கொடுத்த புகாரின் பேரில், வடுவூர் போலீஸார் வழக்கு பதிவு அய்யப்பனை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார்குடி பகுதியில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. விரைந்து மன்னார்குடி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஓரே வேண்டுகோளாக உள்ளது.

Read Entire Article