மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி

2 hours ago 8

மகாயுதி கூட்டணியின் வெற்றியை கொண்டாடிய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா 50-க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளதாக கூறினார். “சிவசேனா தானே உண்மையான சிவசேனா என்பதை மக்கள் தீர்ப்பே நிரூபிக்கிறது” என அவர் தெரிவித்தார்.

புனே மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், அஜித் பவார் தலைமையிலான என்சிபி 10 தலைவர் பதவிகளை கைப்பற்றியது. சிவசேனா 4 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் வென்றுள்ளன. இது அந்த மாவட்டத்தில் மகாயுதி கூட்டணியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது.

விவசாய, பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளில் தாமதம் போன்ற பிரச்சினைகள் இருந்தும், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளாதது அவர்களின் தோல்விக்குக் காரணமாக உள்ளது. வரவிருக்கும் பிரஹன்மும்பை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் முக்கியமான சைகையாகக் கருதப்படுகின்றன.

Read Entire Article