மாமியாருக்கு செக் வைத்த மருமகன்! கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் - சிலை திறப்பு விழாவில் நடந்த அதிரடி ட்விஸ்ட்!

1 hour ago 15

Karthigai Deepam Serial Today Episode Highlights : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1119ஆவது எபிசோடில் கார்த்திக் தனது அம்மாவின் சிலையை வெற்றிகரமாக திறந்து வைத்துள்ளார். சிலை திறப்பு விழாவில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

2 Min read

Published : Feb 10 2026, 10:56 PM IST

14

மத்திய அமைச்சர் சிலை திறப்பு விழா

Image Credit : Zee Tamil You Tube

மத்திய அமைச்சர் சிலை திறப்பு விழா

கார்த்திக் தனது அம்மாவின் ஆசைக்காக ஆதவற்றோர் இல்லம் கட்டி முழு நேரமும் அன்னதானம் வழங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அம்மா கொடுத்த இடத்தில் அவரது நினைவாக சிலை ஒன்றையும் கட்ட முடிவு செய்து, அதற்கான வேலையில் கார்த்திக் ஈடுபட்டார். சிலையையும் வெற்றிகரமாக ஏற்பாடுகள் செய்தார். ஆனால், இந்த சிலை திறப்பு விழா நடக்க கூடாது என்பதற்காக சந்திரகலா மற்றும் சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் புதிய பிளான் போட்டனர்.

24

சாமுண்டேஸ்வரி சரண்டர்,

Image Credit : Zee Tamil You Tube

சாமுண்டேஸ்வரி சரண்டர்,

அதில் ஒன்று தான் சேட்டிடம் ரூ.50 கோடி கொடுத்து சிலை உள்ள இடத்தை விலைக்கு வாங்க முடிவு செய்தார். ஆனால், கார்த்திக் அப்படி ஏதும் நடக்காமல் ரூ.5 கோடி கொடுத்து தனது இடத்தை வாங்கினார். பின்னர், சிலை திறப்பு விழாவும் தடபுடலாக நடந்தது. ஆனால், சிவண்டாண்டி மற்றும் முத்துவேல் சிலைக்கு வெடிகுண்டு வைத்து சந்திரகலாவிற்கு போன் போட்டு சொல்கிறேன் என்ற பெயரில் கார்த்திக்கிற்கு போன் போட்டு சிவனாண்டி சொல்லியுள்ளார்.

34

கார்த்திக் மாஸ்டர் பிளான்

Image Credit : Zee Tamil You Tube

கார்த்திக் மாஸ்டர் பிளான்

சிலை திறப்பு விழாவிற்கான நேரம் வரவே, ஊர் பெரியவர்கள் சாமுண்டீஸ்வரியை விழாவிற்கு அழைத்து வந்தனர். பின்னர் மத்திய அமைச்சரும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வரவே, மத்திய அமைச்சர் மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் இணைந்து சிலையை திறந்து வைத்தனர். இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரை தனது வீட்டிற்கு அழைக்க, அவரும் மறுநாள் வருவதாக கூறினார்.

44

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

Image Credit : Zee Tamil Serial

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

அப்போது வெடிகுண்டு வெடிக்கிறதா இல்லையா என்று பார்த்துக் கொண்டிருந்த சிவனாண்டியிடம் சென்று என்ன பாம் வெடிக்கவில்லையா என்று கார்த்திக் கேட்க, முத்துவேல் மற்றும் சிவனாண்டி இருவரும் உலற, பின்னர் தங்களது தவறை புரிந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்தார். டீ குடித்துக் கொண்டிருக்கும் போது, குடும்ப ஜோதிடர் போன் போட்டு வரலட்சுமி நோன்பு கடைபிடிக்க வேண்டும் என்றார். ஆனால், அது இப்போது முடியாது என்று சொல்ல, ரேவதியோ இங்கேயே பூஜையை செய்தால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லவே, மத்திய அமைச்சரும் ஓகே சொன்னார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read Entire Article