லட்டு பிரசாதம். - கோப்புப்படம்: தமிழ் முரசு
Rs 3.40 crore fraud in Rameswaram temple's laddu prasad sales.
A massive INR 3.4 crore scam in the sale of Laddu prasadam at Arulmigu Ramanathaswamy Temple has led to the suspension of six employees, including prasadam section in-charge Panchamoorthy. The HR&CE Department took action after Panchamoorthy reportedly reduced free laddus, sold them, and independently prepared/sold additional laddus, diverting revenue. The fraud, identified during a surprise inspection by Joint Commissioner Sellathurai last March, involved approximately 1.14 million illegal laddu sales between 2023 and February 2026. Further investigation is underway.
Generated by AI
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் லட்டு பிரசாத விற்பனையில் ஏறக்குறைய 3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வரை பேரளவில் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய கோயில் ஊழியர்கள் ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கோயில் பிரசாதப் பிரிவு பொறுப்பாளரான பஞ்சமூர்த்தி, பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து முறைகேடாக விற்பனை செய்துள்ளார்.
மேலும், கோயில் கணக்கில் காட்டாமல் சொந்தமாக மூலப்பொருள்களை வாங்கி லட்டு தயாரித்து விற்று, அந்த வருவாயைத் தனது சொந்தக் கணக்கில் சேர்த்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை நடத்திய திடீர் ஆய்வில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
முதற்கட்ட விசாரணையில், 2023 முதல் 2026 பிப்ரவரி வரை ஏறத்தாழ 11 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக விற்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மேல் விசாரணை நடந்து வருகிறது.
.png)








English (US) ·