வளநாடு அருகே சட்டவிரோத மணல் அள்ளல்

7 hours ago 5

திருச்சி மாவட்டம் மணப்பாறை வளநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி மற்றும் ஜேசிபி பறிமுதல் , மூவர் கைது.

திருச்சி மாவட்டம் வளநாடு அடுத்த வேம்பனூர் அருகே உள்ள குளத்து பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலைத் தொடர்ந்து தனிப்படை பிரிவு போலீசார் வளநாடு மற்றும் வேம்பனூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேம்பனூர் குளத்து பகுதியில் லாரிகள் மூலம் மணல் அள்ளுவது தெரிய வந்தது. உடனடியாக அப்பகுதியைச் சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் மணல் அள்ளிக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த முருகன் மகன் வேங்கையா( 23) இதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ( 25) திருச்சி மாவட்டம் வளநாடு வேம்பனூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் நந்தகுமார்( 20) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர் .

மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி, இரண்டு டிப்பர் லாரிஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதே போன்று வளநாடு பகுதியில் அதிக அளவில் கனிம வளங்கள் திருடு போவது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற அரசு அனுமதி இன்றி கனிம வளங்களை வெட்டி எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

Read Entire Article