சென்னை: ஜூன் 18-
தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடியுள்ளது. சட்டசபைக்கு இன்று வந்த திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும் தவெக ஆட்சியை விமர்சிக்கும் விதமாக பதகாகைகளை ஏந்தி வந்தனர். அந்த பதாகைகளில் “திரையில் நாயகன், தரையில் வில்லன், கதறல் கேட்குதா சிஎம், ரீல்ஸ் இங்கே ரியல் எங்கே” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர். மேலும் சட்டசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பதவியேற்ற பிறகு சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று துவங்குகிறது. காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. தவெக அரசின் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடரும் மின் வெட்டு சம்பவங்கள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இந்தக் கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சட்டசபைக்கு வந்த திமுக எம்பிக்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். அதேபோல, தவெக ஆட்சியை விமர்சிக்கும் விதமாக பதகாகைகளை ஏந்தி வந்தனர். அந்த பதாகைகளில் “திரையில் நாயகன், தரையில் வில்லன், கதறல் கேட்குதா சிஎம், ரீல்ஸ் இங்கே ரியல் எங்கே, தூயசக்தி இல்லை துயரசக்தி, திரையில் ஹீரோ தரையில் ஜீரோ” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு எங்கே போச்சு என்று கோஷமும் எழுப்பி தங்கள் எதிர்ப்பை திமுக எம்.எல்.ஏக்கள் பதிவு செய்தனர். தமிழக முதல்வரே வாயை திறங்க.. கேட்கலயா கேட்கலயா கதறல் சத்தம் கேட்கலயா” என்று கோஷமும் எழுப்பினர்.