4 லட்சம் மக்கள் கொண்ட செயற்கைத் தீவு உருவாக்கம்!

59 minutes ago 11

970 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் மனித உழைப்பால் செயற்கை தீவு ஒன்று உருவாக்கப்பட்டது குறித்து இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு துபாயிலோ அல்லது சீனாவிலோ இல்லை. இது நெதர்லாந்தில் உள்ள பிளெவோபோல்டர் ஆகும்.

970 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நிலப்பரப்பு ஆறு தசாப்தங்களாக முழுக்க முழுக்க மனித உழைப்பால் உருவாக்கப்பட்டது.

இன்று 400,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் அளவுக்கு இது மிகப் பெரியது. மேலும், இது உலகின் மிகப்பெரிய செயற்கை தீவு என்பதற்கான கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.

பிளெவோபோல்டர், மத்திய நெதர்லாந்தின் பிளெவோலாந்து மாகாணத்தில், ஆம்ஸ்டர்டாமிற்கு கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இது கூய்மீர், கெட்டல்மீர் மற்றும் வேலுமீர் ஆகிய மூன்று நன்னீர் ஏரிகளால் முழுமையாக சூழப்பட்டுள்ளது. இதுவே அதிகாரப்பூர்வமாக இதனை ஒரு தீவு என்று தகுதிபெறச் செய்கிறது.

1919-ஆம் ஆண்டில், நெதர்லாந்து வரலாற்றின் மிகவும் துணிச்சலான பொறியியல் திட்டங்களில் ஒன்றான சூய்டர்சீ திட்டத்தை தொடங்கியது.

இதன் மூலம், வடகடலின் ஒரு பகுதியை வடிக்கவும், அந்த நிலத்தை மீட்டெடுக்கவும், திறந்தவெளி நீர்ப்பரப்பை விவசாயம் மற்றும் வாழ்விடமாக மாற்றவும் திட்டமிடப்பட்டது. இதனை முடிப்பதற்கு 67 ஆண்டுகள் ஆனது.

நிலப்பரப்பு உருவாவதற்கு முன்பாக, பொறியாளர்கள் 1932இல் 32 கிலோமீட்டர் நீளமுள்ள அஃப்ஸ்லூய்ட்ஜிக் அணையை உருவாக்கினர். இது சூய்டர்சீ கடல் பகுதியை அடைத்து, உவர் கடல் நீரை அய்சல்மீர் எனப்படும் நன்னீர் ஏரியாக மாற்றியது.

இந்த ஒரு அணைதான் மற்ற அனைத்து மாற்றங்களையும் சாத்தியமாக்கியது. தொழிலாளர்கள் காற்றாலைகள் மற்றும் மின்சார நீரேற்று நிலையங்களைப் பயன் படுத்தி பில்லியன் கணக்கான லிட்டர் நீரை வெளியேற்றினர்.

1957இல் கிழக்கு பிளெவோ போல்டர் நீருக்கு அடியிலிருந்து வெளிப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1968-இல் தெற்கு பிளெவோபோல்டர் உருவானது. இவை இரண்டும் இணைந்து இன்று நாம் அழைக்கும் பிளெவோபோல்டர் என்ற ஒற்றை நிலப்பரப்பாக உருவெடுத்தன.

1986-ஆம் ஆண்டு பிளெவோ லாந்து அதிகாரப்பூர்வமாக நெதர்லாந்தின் 12-வது மாகாணமாக மாறியது. இன்று, இது லேலிஸ்டாட் மற்றும் அல்மேரே ஆகிய நகரங்களை உள்ளடக்கியதுடன், 400,000-க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

Read Entire Article