ஊருக்குப் போகும்போது செடிகள் காய்ந்துவிடுமே என கவலைப்படுகிறீர்களா? ஒரு வாரம் வரை செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றாமல் அவை பசுமையாக இருக்க, இந்த எளிய டிப்ஸை மட்டும் பின்பற்றுங்கள். இனி கவலையின்றி உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாகத் தொடரலாம்!
17

Image Credit : Getty
அந்த 'குழு' மசாஜ்!
செடிகளைத் தனித்தனியாக வைக்காமல், எல்லாத் தொட்டிகளையும் ஒரே இடத்தில் நெருக்கமாகச் சேர்த்து வையுங்கள். இப்படிச் செய்வதால் செடிகளுக்கு இடையே ஒரு ஈரப்பதமான சூழல் (Micro-climate) உருவாகும். நிழலான இடத்தைத் தேர்வு செய்வது இன்னும் சிறப்பு!
Add Asianetnews Tamil as a Preferred Source
27
Image Credit : Getty
திரி நீர் பாசனம் (The Wicking Method)
ஒரு பெரிய வாளி தண்ணீரை உயரத்தில் வைத்து, அதிலிருந்து ஒரு பருத்தி கயிறு அல்லது திரியை எடுத்து ஒவ்வொரு தொட்டியின் மண்ணுக்குள்ளும் புதையுங்கள். வறட்சி ஏற்படும் போது, நூல் வழியாகத் தண்ணீர் தானாகவே வேருக்குச் செல்லும். இது ஒரு 'நேச்சுரல் ட்ரிப் சிஸ்டம்'!
37
Image Credit : Getty
தலைகீழ் பாட்டில் மேஜிக்
பழைய பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியில் சிறிய துளை போட்டு, அதில் தண்ணீர் நிரப்பி தலைகீழாகத் தொட்டியின் மண்ணில் குத்தி வையுங்கள். தண்ணீர் சொட்டுச் சொட்டாக இறங்கி, வாரம் முழுவதும் மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்கும். செலவே இல்லாத சொட்டு நீர்ப் பாசனம் இது!
47
Image Credit : Getty
ஈரத் துணி 'பெட்'
குளியலறையில் அல்லது நிழலான இடத்தில் பழைய தடிமனான போர்வையையோ அல்லது துணியையோ நனைத்து விரித்து வையுங்கள். அதன் மேல் சிறிய செடித் தொட்டிகளை வைத்தால், தொட்டியின் அடிப்பகுதி வழியாக ஈரப்பதத்தை செடிகள் உறிஞ்சிக் கொள்ளும்.
57
Image Credit : Getty
இயற்கைப் போர்வை
தொட்டியின் மேல் பகுதியில் காய்ந்த இலைகள், தேங்காய் நார் அல்லது வைக்கோலை ஒரு போர்வை போலப் பரப்புங்கள். இது சூரிய ஒளியால் மண் சீக்கிரம் காய்ந்து போவதைத் தடுத்து, ஈரப்பதம் ஆவியாகாமல் பாதுகாக்கும்.
67
Image Credit : Getty
பிளாஸ்டிக் கவர் கூடாரம்
சிறிய செடிகளாக இருந்தால், செடிக்குத் தண்ணீர் ஊற்றி விட்டு ஒரு பெரிய வெளிப்படையான (Transparent) பிளாஸ்டிக் கவரால் தொட்டியை மூடிவிடுங்கள் (செடியைத் தொடாதவாறு). செடியிலிருந்து வெளியேறும் ஆவி கவரில் பட்டு மீண்டும் தண்ணீராக மண்ணுக்கே திரும்பும்!
77
Image Credit : Getty
குளியலறைதான் பெஸ்ட்!
வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில், செடிகளைத் தூக்கி ஜன்னல் வசதியுள்ள குளியலறையில் வைக்கலாம். மற்ற இடங்களை விட அங்கே குளிர்ச்சியும் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும் என்பதால், உங்கள் செடிகள் 10 நாட்கள் வரை வாடாமல் உற்சாகமாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
.png)
53 minutes ago
8







English (US) ·