பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, மத்திய நிதி அமைச்சகம் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
15

Image Credit : Asianet News
மத்திய அரசின் புதிய உத்தரவு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு தற்போது பெரிய அளவிலான “செலவு கட்டுப்பாட்டு” நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் நிதி அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ள புதிய உத்தரவு அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source
25
Image Credit : our own
மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்
மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள இந்த அறிவுறுத்தல்கள், செலவுகளைக் குறைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, எல்ஐசி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் அடங்கி உள்ளன. அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களை குறைக்க வேண்டும், அதிகபட்ச கூட்டங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த வேண்டும், தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
35
Image Credit : X
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், உலகளவில் மத்திய அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் கிழக்கு பதற்ற சூழ்நிலையுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஹார்முஸ் கடல்சந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், எண்ணெய் இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
45
Image Credit : Google
பிரதமர் மோடி வேண்டுகோள்
பிரதமர் நரேந்திர மோடியும் சமீபத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும், மெட்ரோ நகரங்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், வெளிநாட்டு செலவினங்களை குறைப்பது நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு-ஐ பாதுகாக்க உதவும் என்றும் விளக்கமளித்தார்.
55
Image Credit : Google
மீண்டும் லாக்டவுன் வருமா?
இந்த புதிய உத்தரவுகள் “மீண்டும் வீட்டில் இருந்து வேலை காலம் வருமா?” (லாக்டவுன்) என்ற கேள்வியையும் சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. அதிகாரப்பூர்வமாக எந்த பூட்டுதல் அறிவிப்பும் இல்லாவிட்டாலும், செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தற்போது எச்சரிக்கை முறையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
.png)
13 minutes ago
15




English (US) ·