Petrol Diesel Price Hike: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுதொடர்பான SBI பகீர் அறிக்கையை பார்ப்போம்.
14

Image Credit : ChatGPT
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. இத நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கிடைக்கும் பலன்களை, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு முற்றிலும் இல்லாமல் செய்துவிடும் அபாயகரமான கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று SBI ரிசர்ச்சின் 'Ecowrap' அறிக்கை எச்சரித்துள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source
24
Image Credit : Gemini
ரூபாய் மதிப்பு சரிவால் மீண்டும் சிக்கல்
"ரூபாயின் மதிப்பு இன்னும் 2 ரூபாய் சரிந்தால் கூட, அது கச்சா எண்ணெயின் இறக்குமதி விலையை அதிகரித்துவிடும். இதனால், தற்போதைய எரிபொருள் விலை உயர்வால் கிடைத்த பலன்கள் முழுமையாக ஈடுசெய்யப்பட்டுவிடும்," என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது. அதிகரித்த கச்சா எண்ணெய் விலை மற்றும் மாற்றப்படாத சில்லறை விலைகளால் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) சந்திக்கும் நஷ்டத்தைக் குறைக்கும் நோக்கில்தான் இந்த எரிபொருள் விலை உயர்வு செய்யப்பட்டது என SBI ரிசர்ச் அறிக்கை கூறுகிறது.
"சில்லறை விலைகள் மாற்றப்படாததால், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு அதிகரித்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் ஒரு நாளைக்கு சுமார் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கின்றன. இது ஆண்டுக்கு சுமார் 3.6 லட்சம் கோடி ரூபாய் ஆகும்" என்றும் எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது.
34
Image Credit : Asianet News
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் குறையாதா?
இந்த அறிக்கையின்படி, லிட்டருக்கு 3 ரூபாய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் 52,700 கோடி ரூபாய் நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது அவர்களின் FY27-க்கான மதிப்பிடப்பட்ட நஷ்டத்தில் சுமார் 15 சதவீதத்தை மட்டுமே ஈடுசெய்யும். ரூபாய் மதிப்பு சரிவின் அழுத்தத்தை சுட்டிக்காட்டி, அந்த அறிக்கை, "ரூபாய் மதிப்பு ஏற்கனவே ஒரு முக்கியமான சரிவு வரம்பை எட்டியுள்ளது. இதற்கு மேல் நாணயத்தின் மதிப்பு குறைந்தால், உள்நாட்டு எரிபொருள் விலை உயர்வின் நோக்கம் கணிசமாக சிதைந்துவிடும்" என்று கூறுகிறது.
FY27-ல் சராசரி மாற்று விகிதம் ஒரு அமெரிக்க டாலருக்கு 94 ரூபாயாகவும், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 106 டாலராகவும் இருக்கும் என்று வைத்துக்கொண்டால், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு சுமார் 9,964 ரூபாயாக இருக்கும் என்று அந்த அறிக்கை மதிப்பிடுகிறது. 3 ரூபாய் எரிபொருள் விலை உயர்வு, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு பேரலுக்கு சுமார் 477 ரூபாய் பலனை அளிக்கிறது. ஆனால், ரூபாய் மதிப்பில் ஏற்படும் மேலும் 2 ரூபாய் சரிவு, இறக்குமதி செலவை கணிசமாக உயர்த்திவிடும் என்று அது கூறுகிறது.
44
Image Credit : X
கச்சா எண்ணெய் சந்தைகள் அழுத்தம்
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகளால், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகள் அழுத்தத்தில் உள்ளன என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது. "சமீபத்திய IEA அறிக்கையின்படி, கையிருப்புகள் குறைந்து வருவதால் கச்சா எண்ணெய் தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும்" என்று அறிக்கை கூறுகிறது. சமீபத்திய மாதங்களில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு போக்குவரத்து கடுமையாக குறைந்துள்ளது, இது கச்சா எண்ணெய் மற்றும் LNG விநியோகம் இரண்டையும் பாதிக்கிறது என்றும் அறிக்கை மேலும் கூறியது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
.png)
45 minutes ago
10







English (US) ·