Last Updated:May 12, 2026 10:13 PM IST
தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ராணா.

தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, இந்தி, தமிழ் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘பராசக்தி’. இந்திய அளவில் ராணாவுக்கு அடையாளம் கொடுத்த திரைப்படம் என்றால் அது ‘பாகுபலி’ தான். நடிகர் ராணா பொது நிகழ்ச்சிகளில் தனது மனைவியுடன் பெரிதாக கலந்துகொண்டதில்லை. இதனால் அவருக்கு திருமணமாகிவிட்டதா? என்பதே சிலர் ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்.
கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘லீடர்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ராணா டகுபதி. அடுத்த படமே ‘தம் மாரோ தம்’ என்ற இந்திப் படத்தில் நடித்தார். ‘நா இஷ்டம்’ படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்திருந்தார். ‘டிபார்ட்மென்ட்’ இந்திப் படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்திருந்தார்.
2013-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘ஆரம்பம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ராணா. 2015-ல் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் ராணாவுக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. இதில் வில்லனாக அசத்தியிருந்தார். அதன் பிறகு ரஜினியுடன் ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருந்தார்.
2022-ம் ஆண்டு வெளியான ‘விராட்டா பருவம்’ படத்துக்குப் பிறகு 4 வருடமாக நாயகனாக அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். ராணாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலியான மிஹீகா பஜாஜ் என்பவரை கரம்பிடித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு மிஹீகா நீண்ட நாட்களாகவே தெரியும். அவர் என்னுடைய உறவினரின் வகுப்புத் தோழி. அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அந்த வகையில் எனக்கும் அவர் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவர் வீடும் என்னுடைய வீட்டுக்கு அருகில் தான் உள்ளது. பல்வேறு யோசனைக்களுக்குப் பிறகு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
ஆனால், ஒருவர் உங்கள் இதயத்துக்குள் நுழைந்துவிட்டால், எல்லா கணக்குகளும் தவிடுபோடியாகிவிடும். அந்த வகையில் தான் நான் மிஹீகாவை காதலிக்க தொடங்கினேன்” என கூறியிருந்தார். ராணாவின் மனைவி மிஹீகா இன்டீரியர் டிசைனர், தொழில்முனைவோராக இருக்கிறார்.

12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? | EPF Pension
EPFO கடந்த சில ஆண்டுகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
EPS-95 ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.7,500ஆக உயர்த்த அரசு பரிசீலனை.
ஓய்வூதியம் கணக்கீடு கடந்த 12 மாத சராசரி சம்பளம் பணிக்காலத்தை பொருத்தது.
.png)








English (US) ·