Last Updated:May 12, 2026 8:42 PM IST
கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

முதலமைச்சர் விஜயின் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 50 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், சென்னையில் முதல்கட்டமாக வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிறுவனங்கள் அருகே உள்ள 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதேபோல் கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நெல்லை, மதுரை, திருச்சி, நாகை உட்பட மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 50 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை 2 வாரத்திற்குள் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? | EPF Pension
EPFO கடந்த சில ஆண்டுகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
EPS-95 ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.7,500ஆக உயர்த்த அரசு பரிசீலனை.
ஓய்வூதியம் கணக்கீடு கடந்த 12 மாத சராசரி சம்பளம் பணிக்காலத்தை பொருத்தது.
.png)







English (US) ·