அடுத்த 30 நாட்கள் மிகவும் ஆபத்தானது.! 12 ராசிக்காரர்களுக்கும் ஆப்பு காத்திருக்கு.! எச்சரிக்கையா இருங்க.!

2 hours ago 13

Angarak Yog 2026 : இந்த ஆண்டில் உருவாகும் சிறப்பு யோகங்களில் அங்காரக யோகமும் ஒன்று. பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 2 வரை கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் ராகு இணைந்திருக்கும் காலமே அங்காரக யோகம். இந்த காலம் மிகவும் ஆபத்தானது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

2 Min read

Published : Mar 02 2026, 03:25 PM IST

15

அங்காரக யோகம் 2026

Image Credit : Asianet News

அங்காரக யோகம் 2026

செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம் மற்றும் வேகத்தைக் குறிக்கும் கிரகமாவார். ராகு நிச்சயமற்ற தன்மை மற்றும் குழப்பத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் சேரும்போது அங்காரக யோகம் உருவாகிறது. 2026-ல் பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 2 வரை இந்த யோகம் கும்ப ராசியில் நீடிக்கும். குறிப்பாக மார்ச் 13-14 தேதிகளில் சதய நட்சத்திரத்தில் இந்த சேர்க்கை வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் முடிவெடுப்பதில் கவனம் தேவை.

25

முக்கிய முடிவுகள் வேண்டாம்

Image Credit : Getty

முக்கிய முடிவுகள் வேண்டாம்

அங்காரக யோகத்தின் போது முக்கிய முடிவுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. குறிப்பாக வேலை மாறுவது, புதிய தொழில் தொடங்குவது, பெரிய முதலீடுகள் செய்வது, திருமண முடிவுகள் எடுப்பது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் எடுக்கும் அவசர முடிவுகள் பிற்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். செவ்வாய் மற்றும் ராகுவின் தாக்கத்தால் கோபத்தில் முடிவெடுக்கும் சூழல் ஏற்படலாம்.

35

வாகனங்களில் கவனம்

Image Credit : Google

வாகனங்களில் கவனம்

மார்ச் 9 முதல் மார்ச் 22 வரையிலான காலம் சற்று ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக சாலை அல்லது விமானப் பயணம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அவசியமெனில், முழுமையான திட்டமிடலுடன் செல்ல வேண்டும். சிறிய பயணங்கள் மட்டுமே பாதுகாப்பானது. செவ்வாய் வாகனங்களையும், ராகு எதிர்பாராத நிகழ்வுகளையும் குறிப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

45

குடும்பத்தில் விரிசல்கள் வரலாம்

Image Credit : Asianet News

குடும்பத்தில் விரிசல்கள் வரலாம்

இந்த நேரத்தில் குடும்பம் அல்லது பணியிடத்தில் தகராறுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மேஷம், விருச்சிகம், கும்ப ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிறிய விஷயங்கள் பெரிய பிரச்சனைகளாக மாற வாய்ப்புள்ளது. தவறான புரிதல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனதை அமைதியாக வைத்திருக்க தியானம், பிராணாயாமம் செய்வது நல்லது.

55

முதலீடுகள் வேண்டாம்

Image Credit : Asianet News

முதலீடுகள் வேண்டாம்

அங்காரக யோகத்தின் போது நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பங்குச்சந்தை, முதலீடுகள், பெரிய சொத்து வாங்குவது போன்றவற்றில் இருமுறை யோசிக்க வேண்டும். இந்த காலத்தில் ரிஸ்க் அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. ஏப்ரல் 2-க்கு பிறகு முதலீடுகள் குறித்து முடிவெடுப்பது நல்லது. கோபமான செயல்கள், சண்டைகள் அல்லது பழிவாங்கும் உணர்வுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் ஹனுமான் மந்திரங்களை பாராயணம் செய்வது மன அமைதியைத் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read Entire Article