இடைப்பாடியில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

2 hours ago 10

இடைப்பாடி, மே 10– மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள் விழா முன்னிட்டு இடைப்பாடி பெரியார் படிப்பகத்தில் 05.05.2026 மாலை 4.00 மணியளவில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது

(1) உங்கள் பார்வையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், (2) புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும்..பெரியாரும், (3) புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தமிழ்த்தொண்டு, (4) புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பெண்ணடிமைஒழிப்பும்..மூடநம்பிக்கை ஒழிப்பும் – தலைப்புகளில் மாணவ மாணவிகள் சுமார் 25 பேர் எழுதினார்கள்.

இதில் முதல்பரிசு..க.தர்ஷினி, இரண்டாம் பரிசு மா.நர்மதா, மூன்றாம் பரிசு, ப.இலக்கியா. போட்டியில் கலந்து கொண்ட வர்களுக்கு சான்றிதழ் மற்றும் புரட்சிக் கவிஞர் பாடல் புத்தகம்.,திருக்குறள் உரை புத்தகம், உண்மை..மற்றும் பெரியார் பிஞ்சு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இடைப்பாடி.கோவி.அன்புமதி தலைமையேற்க, நகரச் செயலாளர் மெய்யானருள் வரவேற்புரையாற்ற, வெள்ளாறு வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

மேட்டூர் மாவட்ட கழகத் தலைவர்  கா.நா.பாலு  தொடக்கவு ரையாற்றினார்.

மேட்டூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் சி.மதியழ கன் பரிசுகள் – புத்தகம் வழங்கி வாழ்த்துரையாற்றினார்.

பெரியார் படிப்பகக் காப்பாளர் மெ.காமராஜ் சான்றிதழ் வழங்கினார்.

மாணவி ப.தர்ஷினி நன்றி கூற, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது..

Read Entire Article