இனி டோலில் நிற்க வேண்டாம்.. வாகனம் ஓடும் போதே கட்டணம் எடுக்கப்படும்.. இந்தியாவே மாறப்போகுது

2 hours ago 18

இந்தியாவில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் பெரிய மாற்றம் வருகிறது. இனி டோல் பிளாசாவில் வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

15

டோல் பிளாசா இல்லாமல் சுங்க வசூல்

Image Credit : stockPhoto

டோல் பிளாசா இல்லாமல் சுங்க வசூல்

இந்தியாவில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் பெரிய மாற்றம் வருகிறது. இனி டோல் பிளாசாவில் வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வாகனம் ஓடும் போதே சுங்கத் தொகை தானாகவே வசூலிக்கப்படும். இதனால், நீண்ட வரிசைகள், போக்குவரத்து நெரிசல், நேர இழப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

25

புதிய டோல் விதிகள்

Image Credit : stockPhoto

புதிய டோல் விதிகள்

இந்த புதிய தடை இல்லாத சுங்க வசூல் முறை முதன்முறையாக குஜராத்தின் சூரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வாகனங்கள் எந்த தடையுமின்றி செல்லலாம்; சுங்கத் தொகை தானாகவே கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும். இந்த முறையில், ஹை-ரெசல்யூஷன் கேமராக்கள், ஜிபிஎஸ் மற்றும் நம்பர் பிளேட் ரிகக்னிஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பாஸ்டேக் இல்லாத வாகனங்களையும் அடையாளம் காண முடிகிறது.

35

சுங்க வசூல் அப்டேட்

Image Credit : Asianet News

சுங்க வசூல் அப்டேட்

இந்த புதிய அமைப்பில், சாலையின் ஒவ்வொரு வழித்தடத்திலும் பொருத்தப்பட்ட கேமராக்கள் வாகன எண் பலகையை வாசிக்கும். பாஸ்டேக் இல்லாத வாகனம் அல்லது கட்டணம் செலுத்தாமல் சென்றால், அது தானாகவே பதிவு செய்யப்பட்டது, வாகன உரிமையாளருக்கு இ-சலான் அனுப்பப்படும். ரேடார் மற்றும் லிடார் தொழில்நுட்பம் மூலம் 360 டிகிரி கண்காணிப்பு செய்யப்படுவதால், யாரும் சுங்கத்தை தவிர்க்க முடியாது.

45

பாஸ்டேக் ரூல்ஸ்

Image Credit : Getty

பாஸ்டேக் ரூல்ஸ்

பாஸ்டேக் இருந்தாலும், அதில் இருப்புத் தொகை குறைவாக இருந்தால் அல்லது அது பிளாக் லிஸ்டில் இருந்தால் கூட, இந்த அமைப்பு வாகனத்தைக் கண்டறியும். அத்தகைய சந்தர்ப்பங்களில், வாகன உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் மற்றும் ஆப் மூலம் எச்சரிக்கை அனுப்பப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும்.

55

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

Image Credit : Social Media

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் இந்த முறை, எதிர்காலத்தில் நாட்டின் பிற முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் விரிவாக்கப்படலாம். இதன் மூலம் பயணம் மேலும் வேகமாகவும், சீராகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read Entire Article