Last Updated:October 14, 2025 9:44 AM IST
பாமக சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வலியுறுத்தி அக்கட்சி எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாமக சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வலியுறுத்தி அக்கட்சி எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டமன்றம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடி இருக்கிறது. இன்று தொடங்கி வரும் 17ம் தேதி வரை 4 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. பேரவை கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள், மறைந்த முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் சிபு சோரன், மறைந்த கேரளாக முதல்வர் அச்சுதானந்தன், மறைந்த சிபிஐ மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி. மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், மறைந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி பீலா வெங்கடேசன், மறைந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
முன்னதாக பாமக சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வலியுறுத்தி கடந்த 25-ம் தேதி சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, அக்கட்சி எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரும் 15ம் தேதி கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை பேரவைக்கு அளிக்கப்பட்டு, 16ம் தேதி அதன் மீது விவாதமும், 17ம் தேதி பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும். இந்த கூட்டத் தொடரில் கரூர் சம்பவம், கிட்னி திருட்டு விவகாரம், இருமல் மருந்தால் ஏற்பட்ட மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :
October 14, 2025 9:44 AM IST