டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published:Just NowUpdated:Just Now

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனிடையே நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயற்சி செய்த கரப்பான்பூச்சி கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கினர்.

டெல்லி போராட்டம்
இதனால், இளைஞர்களின் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு அனுமதி மறுத்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களை குண்டு கட்டாகக் கைது செய்தனர். இந்நிலையில் இந்தக் கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் NEET தேர்வுக்கு எதிராகப் போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாகக் கைது செய்யும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதல்வர் விஜய் - பிரதமர் மோடி
CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரைக் கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
.png)








English (US) ·