இந்த நிலையில் யார் இந்த அஜய் ரஸ்தோகி என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக 2018 முதல் 2023 வரை பணியாற்றியவர். 2004 முதல் 2018 வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2018ல் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தனது பதவிக் காலத்தில், ரஸ்தோகி 506 அமர்வில் பங்கேற்று விசாரித்துள்ளார். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாகவும், திருமணத்தை மீறிய உறவுகளை குற்ற மற்றதாக்குதல், கருணைக் கொலை உரிமைக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியும் உள்ளார்.