இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் 100% டிஜிட்டல் மயமாகியுள்ளது. இனி பாஸ்டேக் கட்டாயம், இல்லையெனில் UPI மூலம் 1.25 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தாமல் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
15

Image Credit : stockPhoto
டோல் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை முழுமையாக மாறியுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்த புதிய விதிகளின் படி, ஏப்ரல் 10 முதல் அனைத்து டோல் பிளாசாக்களிலும் ரொக்கம் முற்றிலும் நீக்கப்பட்டு, 100% டிஜிட்டல் கட்டணம் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது. தினசரி பயணிகளின் அனுபவத்தை எளிதாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source
25
Image Credit : X
டோல் பிளாசாவில் பெரிய மாற்றம்
புதிய நடைமுறையின் மையத்தில் பாஸ்டேக் உள்ளது. இனி சுங்கக் கட்டணம் செலுத்தும் அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு ரொக்கமாக கட்டணம் செலுத்தும் வாய்ப்பு இல்லை. அதற்கு பதிலாக UPI உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள் மூலம் கட்டணம் செலுத்தலாம், ஆனால் அதற்கான வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். டிஜிட்டல் கட்டணம் செலுத்த மறுக்கும் வாகனங்களுக்கு வழி மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
35
Image Credit : Google
இ-நோட்டீஸ் அனுப்பப்படும்
மேலும், கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இ-நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு மூன்று நாட்களுக்குள் தொகையை செலுத்தவில்லை என்றால், இரட்டிப்பு சுங்கக் கட்டணம் விதிக்கப்படும். தேவையானபட்சத்தில் வாகனம் சுங்கப் பாதையிலிருந்து அகற்றப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
45
Image Credit : Google
சுங்கக் கட்டண விலக்கு
சுங்கக் கட்டண விலக்கு விதிகளிலும் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பல இடங்களில் ஏற்பட்ட சர்ச்சைகளை தவிர்க்க, விலக்கு இனி தனிநபர்களுக்கு அல்ல, குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கே வழங்கப்படும். அதற்கான உரிய வழிமுறைகளில் ‘எக்செம்ப்ட் பாஸ்டேக்’ பெற வேண்டியது அவசியம். இதனால் அடையாள அட்டைகள் சரிபார்ப்பில் ஏற்படும் தாமதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
55
Image Credit : Asianet News
பாஸ்டேக் பாஸ்
தொடர்ந்து நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் பயணிகளுக்காக பாஸ்டேக் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.3,075 கட்டணத்தில் 200 முறை வரை சுங்கக் கடப்பதற்கு அனுமதி வழங்கும் இந்த திட்டம், தினசரி பயணிகளுக்கு செலவு கட்டுப்பாட்டை அளிக்கும். எனினும், அவ்வப்போது பயணம் செய்வோருக்கு பழைய கட்டணம் செலுத்தும் முறையே பொருத்தமாக இருக்கலாம். பயணத்தில் இடையூறு தவிர்க்க, பாஸ்டேக் செயலியில் இருப்பதையும், KYC விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்துவது அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
.png)
58 minutes ago
10






English (US) ·