பருவநிலை தகவமைப்பில் செயலாற்ற இது சரியான நேரம்

1 hour ago 17

487454f6-e8a7-43b7-9db8-431c10e7e866

பருவநிலை தகவமைப்பு உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாக உருவெடுத்து வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பருவநிலை மாற்றங்கள் கொண்டுவரும் தாக்கங்களை கருத்தில்கொண்டு  நாடு அதன் முன்னுரிமைகளை சீரமைத்திட வேண்டும் என்று அண்மையில் கூறியிருந்தார் நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி.

வெப்பம் அதிகரிப்பது, கடல் மட்ட அளவு உயர்வது உள்ளிட்ட  பருவநிலை சார்ந்த மாற்றங்களை சிங்கப்பூர் கடந்து செல்கையில், பருவநிலைக்கு ஏற்ப தகவமைத்தல் சார்ந்த இக்கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. பருவநிலை தகவமைப்பில் செயலாற்றிட இது சரியான தருணமாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மே 2023ல் 37 டிகிரி செல்சியஸ் உச்சத்தைத் தொட்ட வெப்பநிலை, கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் திடீர் வெள்ளம், பெருமழை என அனைத்தும் சிங்கப்பூரிலும் பருவநிலை சார்ந்த அச்சுறுத்தல்கள் நிகழ்வதை சுட்டிக்காட்டுகின்றன.

கல்விக்கான மூத்த துணை அமைச்சருமான ஜனில், கரிம வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பான இலக்கில், புவிசார் அரசியல் சூழல்கள் இடையூறுகளை விளைவித்துள்ளதால் பருவநிலை தகவமைப்பில் சிங்கப்பூர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

Read Entire Article