Last Updated:Mar 09, 2026 10:50 PM IST
இந்த ரமலான் மாதம் இரவுகளில் தராவீஹ் தொழுகை தொழுகப்படும். இந்த தராவீஹ் என்பது, இஸ்லாமிய மாதமான ரமலானில் இரவு நேரத்தில் செய்யப்படும் சிறப்புத் தொழுகையாகும். இது சுன்னத் ஜமாத் இஸ்லாமியர்கள் செய்யும் தொழுகையாகும்.

ரமலான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாக உள்ளது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள் ஆகும். பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள்.இஸ்லாமியர்களின் பக்தி மற்றும் சுய ஒழுக்கத்தின் செயலாக இந்த நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரமலான் மாதம் இரவுகளில் தராவீஹ் தொழுகை தொழுகப்படும். இந்த தராவீஹ் என்பது, இஸ்லாமிய மாதமான ரமலானில் இரவு நேரத்தில் செய்யப்படும் சிறப்புத் தொழுகையாகும். இது சுன்னத் ஜமாத் இஸ்லாமியர்கள் செய்யும் தொழுகையாகும்.
ரமலான் முழுவதும் தராவீஹ் தொழுகை நடத்துபவர்களுக்கும், தொழுபவர்களுக்கும் மகத்தான வெகுமதி கிடைக்கும் என்றும், அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது.
இது குறித்து ஹஜரத் கூறுகையில் தராவீஹ் தொழுகை, 8, 12 அல்லது 20 ரகாத்களில் முடிவடையும் வரை 2 செட்களில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. ரமலான் மாதம் முழுவதும் சூரிய அஸ்தமனத்தின் போது மக்கள் வரிசையில் கூடி தராவீஹ் தொழுகையைச் இஸ்லாமியர்கள் செய்வார்கள். குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்கவும் சிந்திக்கவும் தராவீஹ் தொழுகை ரமலான் மாதத்தில் செய்யப்படுகிறது.
தராவீஹ் தொழுகை, மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் ஆன்மீகத்தை மேம்படுத்தும் நிகழ்வாக இருப்பதால் மற்ற நாட்களை காட்டிலும் இந்த ரமலான் மாத இரவுகளில் அதிக இஸ்லாமியர்கள் இந்த தொழுகையை தொழ வருகை தருவார்கள் என தெரிவித்தார்.

விரக்தியில் தற்கொலை செய்த தந்தை ... துக்கம் தாளாமல் மகளும் தற்கொலை...
சென்னையில் திருமணத்தை நடத்த முடியாத மன உளைச்சலில் தந்தை தற்கொலை
தந்தை இறந்த துக்கம் தாளாமல் அவரது மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்தார்
இருவரும் உயிரிழந்த சம்பவத்தில் வேறு காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை
.png)






English (US) ·