ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) பிப்ரவரி 15 முதல் குறிப்பிட்ட பண பரிமாற்றங்களுக்கு புதிய சேவை கட்டணங்களை அறிமுகப்படுத்துகிறது. பிப்ரவரி 15க்கு முன் செய்து முடித்தால் கூடுதல் செலவை தவிர்க்கலாம்.
15

Image Credit : Google
பிப்ரவரி 15 முதல் புதிய கட்டணங்கள்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறைகள் வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் என்று எஸ்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது. உடனடி பண பரிமாற்றத்திற்கு பயன்படும் ஐஎம்பிஎஸ் சேவையில், இதுவரை ஆன்லைனில் இலவசமாக வழங்கப்படும் சில வசதிகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
25
Image Credit : stockPhoto
எஸ்பிஐ புதிய விதிகள்
குறிப்பாக அவசர பண பரிமாற்றங்களுக்கும், UPI வரம்பை மீறும் நேரங்களிலும் ஐஎம்பிஎஸ் அதிகம் பயன்படுத்தப்படுவதால், இந்த மாற்றம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ ஆப் வழியாக மேற்கொள்ளப்படும் சில ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்கள் கட்டணமின்றி இருந்தன. ஆனால், டிஜிட்டல் சேவைகளுக்கான தொழில்நுட்ப செலவுகள் அதிகரித்து வருவதால், பெரிய தொகை பரிமாற்றங்களுக்கு குறைந்த அளவில் சேவை கட்டணம் விதிக்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.
35
Image Credit : Bloomberg.com
எஸ்பிஐ ஆன்லைன் பண பரிமாற்றம்
இதன் மூலம் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்தவும், வருமானத்தை உயர்த்தவும் வங்கி திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ரூ.25,000 வரை ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. இது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியான செய்தி. ரூ.25,001 முதல் ரூ.1 லட்சம் வரை பரிமாற்றங்களுக்கு ரூ.2 + ஜிஎஸ்டி, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ரூ.6 + ஜிஎஸ்டி, மேலும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ரூ.10 + ஜிஎஸ்டி சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
45
Image Credit : Getty
எஸ்பிஐ பண பரிமாற்ற கட்டணம்
அதே நேரத்தில், வங்கி கிளைக்கு நேரில் சென்று ஐஎம்பிஎஸ் பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய கட்டணங்களே தொடரும். அனுப்பும் தொகைக்கு ஏற்ப ரூ.2 முதல் ரூ.20 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மேலும், சில சிறப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய கட்டணங்கள் பொருந்தாது.
55
Image Credit : Getty
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
பாதுகாப்புத் துறை, மத்திய அரசு, ரயில்வே, காவல்துறை ஊழியர்களின் சம்பளக் கணக்குகள், ஷௌர்யா ஃபாமிலிஷன் மற்றும் எஸ்பிஐ ரிஷ்தே கணக்குகள் வைத்திருப்பவர்கள், வழக்கம் போல ஐஎம்பிஎஸ் சேவையை இலவசமாகப் பெறலாம். எனவே, அதிக தொகை பரிமாற்றம் செய்ய நினைப்பவர்கள், பிப்ரவரி 15க்கு முன் பண பரிமாற்றங்களை முடித்தால் கூடுதல் செலவை தவிர்க்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
.png)
2 hours ago
17







English (US) ·