Fraud டிஜிட்டல் மோசடியில் இழந்த பணத்திற்கு ரூ.25,000 வரை இழப்பீடு! ஓடிபி பகிர்ந்தாலும் கிடைக்கும். ஆர்பிஐ-யின் புதிய அறிவிப்பு மற்றும் விதிமுறைகள் இதோ.
15

Image Credit : Gemini
Fraud
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ. 25,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ஓடிபி (OTP) பகிர்வது போன்ற தவறுகளால் பணம் இழந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
25
Image Credit : X
யார் யாருக்கு இந்த இழப்பீடு கிடைக்கும்?
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் மோசடி மூலம் பணத்தை இழந்தால், அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். வாடிக்கையாளர் அறியாமல் ஓடிபி (OTP) எண்ணை மோசடி நபர்களிடம் பகிர்ந்திருந்தாலும், அந்தப் பரிவர்த்தனை திட்டமிடப்படாதது மற்றும் பணம் இழக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், கேள்விகள் எதுவும் கேட்காமல் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்துள்ளார்.
35
Image Credit : Asianet News
இழப்பீட்டுத் தொகை மற்றும் விதிமுறைகள்
இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ. 25,000 வரை இழப்பீடு பெறலாம். ஆனால், இழப்பீட்டுத் தொகையில் 15 சதவீதத்தை வாடிக்கையாளர் ஏற்க வேண்டும் (Skin in the game). அதாவது, மோசடி நடந்த தொகையில் 85 சதவீதம் வரை வங்கி மூலம் திரும்பக் கிடைக்கும். ஒரு வாடிக்கையாளர் தனது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே இந்த இழப்பீட்டைப் பெற முடியும்.
45
Image Credit : Asianet News
எங்கிருந்து பணம் வழங்கப்படும்?
டெபாசிட்டர் எஜுகேஷன் அண்ட் அவேர்னஸ் ஃபண்ட் (DEA Fund) எனப்படும் வைப்புத் தாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியிலிருந்து இந்த இழப்பீடு வழங்கப்படும். இந்த நிதியில் சுமார் ரூ. 85,000 கோடி உள்ளது. இதில் 10 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத டெபாசிட் தொகைகளும் அடங்கும்.
55
Image Credit : Getty
கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க ஆர்பிஐ மேலும் சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. பயனாளிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதில் தாமதம் (Lagged credit) மற்றும் மூத்த குடிமக்களுக்கான கூடுதல் அங்கீகார முறைகள் (Extra authentication) அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த புதிய இழப்பீட்டுத் திட்டம் குறித்த வரைவு விதிமுறைகள் விரைவில் பொதுமக்களின் கருத்துக்காக வெளியிடப்படும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
.png)
2 hours ago
18







English (US) ·