மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள கோலாப்புரி பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் அருகில் இருக்கும் தத்கேதா பகுதியில் இருக்கும் குளத்திற்கு சென்றனர். அவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட அங்கு சென்றனர். சாப்பாடு எடுத்துச்சென்று அங்கேயே சாப்பிட்டனர். அதன் பிறகு ஒரு சிறுமி ரீல்ஸ் எடுப்பதற்காக குளத்தில் இறங்கினான். ஏரியின் ஆழம் தெரியாமல் உள்ளே இறங்கியபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டாள். இதனால் அவன் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தாள். உடனே அவனை காப்பாற்ற பாயல் என்ற பெண் ஏரிக்குள் இறங்கினார்.
ஆனால் அவரும் சேர்ந்து நீரில் மூழ்க ஆரம்பித்தனர். இதனால் கரையில் இருந்த மேலும் இரண்டு பேர் தண்ணீருக்குள் இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் நான்கு பேரும் நீரில் மூழ்கி இறந்துபோனார்கள். இது குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே நேரத்தில் மூன்று குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்து இருப்பது அவர்களது கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்தவர்களில் இரண்டு பேர் சகோதரன், சகோதரிகள் ஆவர்.
இறந்தவர்கள் பெயர் முறையே சோனாலி(16), ஆதித்யா(12), பாயல்(14), கஜானன்(13) என்று தெரிய வந்துள்ளது. விசாரணையில் முதலில் சோனாலிதான் தண்ணீருக்குள் இறங்கி ரீல்ஸ் எடுக்க முயன்றதாக தெரிய வந்தது. அவளை அவளது சகோதரனும், பாயலும் சேர்ந்து காப்பாற்ற சென்றுள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
.png)







English (US) ·