Last Updated:May 09, 2026 3:23 PM IST
ஜனநாயகத்தில் "என் ஒருவனால் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது?" என்று நினைப்பவர்களுக்கும், அரசியல் ஒரு சாக்கடை என்று மூக்கை பொத்திக் கொண்டு கடப்போர்க்கும் இன்றைய தமிழக அரசியல் களம் சில படிப்பினைகளை வழங்கியுள்ளது

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைப்பதற்கான பணிகளை தமிழக வெற்றிக் கழகம் தீவிரப்படுத்தியுள்ளது.
234 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமனறப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் நின்று வெற்றி பெற்றதால் தவெகவுக்கு ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்பட்டது. 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. திமுகவுடனான தனது கூட்டணியையும் முறித்துக் கொண்டது.
இந்நிலையில், தவெக புதிய அரசமைக்க தலா இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பான ஆதரவுக் கடிதத்தையும் வழங்கியுள்ளன. எனவே, தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது.
தவெக ஆட்சியமைக்க இன்னும் ஒரு எம்எல்ஏ வின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தவெகவுக்கு ஆதரவு வழங்கும் என செய்திகள் வெளியாகின. இதுகுறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை.
ஜனநாயகத்தில் "என் ஒருவனால் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது?" என்று நினைப்பவர்களுக்கும், அரசியல் ஒரு சாக்கடை என்று மூக்கை பொத்திக் கொண்டு கடப்போர்க்கும் இன்றைய தமிழக அரசியல் களம் சில படிப்பினைகளை வழங்கியுள்ளது.
முன்னதாக, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட பெரியகருப்பன், வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டார். பல லட்ச வாக்குகள் பதிவாகும் ஒரு தொகுதியில், அந்த ஒரு நபர் மட்டும் வாக்குச்சாவடிக்கு வராமல் இருந்திருந்தாலோ அல்லது மாற்றிப் போட்டிருந்தாலோ முடிவு தலைகீழாக மாறியிருக்கும்.
ஒரு வாக்கினில் திமுக முன்னாள் அமைச்சர் தோல்வி அடைந்தததும், ஒரு சீட்டுக்கு ஆதரவு கிடைக்காமல் தவெக தலைவர் தடுமாறுவதும் ஜனநாயகத்தின் உள்ளார்ந்த தன்மையை வெளிப்படுத்துகிறது.
1999-ஆம் ஆண்டு, அஇஅதிமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால், வாஜ்பாய் தலைமையிலான அரசு வெறும் 13 மாதங்களில் கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வாஜ்பாய் அரசு ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
அடுத்த 5 ஆண்டுகளில் தங்கம் விலை 80 சதவீதம் வரை உயரும் என கணிப்பு.
அமெரிக்க டாலரின் இருப்பை குறைத்து தங்கம் அதிகமாக வாங்கும் போக்கு அதிகரிப்பு.
மத்திய வங்கிகள் தங்கத்தின் இருப்பை உயர்த்தும் என்பதால் விலை மேலும் உயரும்.
.png)





English (US) ·