பாதுகாப்பா, வளர்ச்சியா என்ற குழப்பத்தில் சேமிப்பை FD-யில் முடக்கி அழிக்காதீர்கள். பங்குச்சந்தை நிபுணராகாமலேயே, எவ்விதப் பதற்றமுமின்றி பாதுகாப்பாக ₹5 கோடி ஓய்வுக்கால நிதியை அடைவதற்கான 'Blueprint'-ஐப் பெற இன்றே முன்பதிவு செய்யுங்கள்!
Published:3 mins agoUpdated:3 mins ago

வெளிநாட்டில் வேலை பார்க்கும் நம்மவர்களில் பலரிடம் ஒரு விசித்திரமான முரண்பாடு உண்டு. சம்பாத்தியம் என்னவோ பல லட்சங்களைத் தாண்டும்; ஆனால், முதலீடு என்று வரும்போது மட்டும் அதீத பாதுகாப்பைத் தேடிப் பழைய காலத்துக்கே சென்றுவிடுவார்கள்.
பல வருடங்கள் குடும்பத்தைப் பிரிந்து, ரத்தமும் வியர்வையுமாகச் சம்பாதித்த பணம். அதை எந்தவிதத்திலும் இழந்துவிடக் கூடாது என்ற அந்த ஆழமான பயம் முற்றிலும் நியாயமானதுதான். அந்த ஒரு பயத்தாலேயே, கையில் சேரும் பெரிய தொகையை அப்படியே நிரந்தர வைப்பு நிதியில் (FD) முடக்கி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்குவார்கள்.
ஆனால், அந்த நிம்மதி ஒரு மாயை! ஏழு சதவீத வட்டி கிடைக்கிறது என நீங்கள் கணக்குப் போடும்போது, ஆறு சதவீத பணவீக்கம் உங்கள் பணத்தின் வாங்கும் திறனை அமைதியாகத் தின்று தீர்க்கிறது. முடிவில், உங்கள் பணத்தின் உண்மையான வளர்ச்சி வெறும் ஒரு சதவீதம் மட்டுமே. இது நீங்கள் தேடிய பாதுகாப்பல்ல; உங்களின் எதிர்காலத்தை மெதுவாக அழிக்கும் ஒரு நிதிச் சிறை.

NRI
ஊருக்குத் திரும்ப இருக்கீங்களா?
வெளிநாட்டில் ஒரு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, நிரந்தரமாக ஊர் திரும்பலாம் என முடிவெடுக்கும்போதுதான் பலருக்கும் நிஜமான அதிர்ச்சி காத்திருக்கும். இத்தனை வருடங்கள் வெளிநாட்டில் சேர்த்த பணம், சொந்த ஊரின் தற்போதைய வாழ்க்கை முறைக்கும், பிள்ளைகளின் கல்லூரிச் செலவுகளுக்கும் கொஞ்சமும் போதவில்லை என்ற உண்மை முகத்தில் அறையும். கையில் இருக்கும் குறைவான சேமிப்பை வைத்துக்கொண்டு மீதமுள்ள காலத்தை எப்படி ஓட்டுவது என்ற மன உளைச்சல் மிகப்பெரியது.
சரி என்று இதற்கு நேர்மாறாக, "பணம் வேகமாக வளர வேண்டும்" என்ற ஆசையில், எந்தவிதப் புரிதலும் இல்லாமல் பங்குச்சந்தைக்குள் குதிப்பவர்களும் உண்டு. ஏதோ ஒரு வீடியோவைப் பார்த்தோ, நண்பர்கள் சொல்வதைக் கேட்டோ சேமிப்பு முழுவதையும் ஒரேயடியாக முதலீடு செய்வார்கள். சந்தை லேசாகச் சரிந்தால் கூட, தூக்கம் தொலைத்துப் பதற்றத்தில் வெளியேறுவார்கள்.
பாதுகாப்பை மட்டுமே தேடினால் பணம் வளராது; அதீத வளர்ச்சியை மட்டுமே தேடினால் முதலீட்டில் நிம்மதி இருக்காது. அப்படியென்றால், இந்த இரண்டுக்கும் நடுவே உள்ள அந்தச் சரியான புள்ளி எது?
உங்கள் நிதிப் பயணத்தை சீராக்க ரெடியா?
நிஜத்தைச் சொல்லப்போனால், நீங்கள் ஊர் திரும்பும்போது கையில் ஐந்து கோடி ரூபாய் என்ற ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி இருப்பது எந்த வகையிலும் சாத்தியமில்லாத மாயாஜாலம் கிடையாது. அது உணர்ச்சிகளைக் கடந்த ஒரு மிக எளிய கணிதம்.
இதற்கு நீங்கள் தினமும் பங்குச்சந்தை நிலவரங்களை மணிக்கணக்கில் ஆராய வேண்டியதில்லை; நிதித்துறை நிபுணராக மாற வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுக்குத் தேவையானது எல்லாம், பாதுகாப்பையும் வளர்ச்சியையும் சரியாகப் பிரித்து முதலீடு செய்யும் ஒரு தெளிவான வரைபடம் (Blueprint) மட்டுமே!
நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தது போதும்; இனி, உங்கள் பணமும் உங்களுக்காகக் களம் இறங்கி உழைக்க வேண்டும். அந்தத் தெளிவான நிதி வரைபடத்தை எப்படி உருவாக்குவது? வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீட்டில் செய்யும் அந்தப் பொதுவான தவறுகளை எப்படித் தவிர்ப்பது?

Labham Workshop for NRIs
.png)





English (US) ·