Last Updated:Feb 08, 2026 6:13 PM IST
8 வருடங்களாக காதலித்து மாணவியை திருமணம் செய்துகொண்டார் இந்த நடிகர். யார் இவர்? அவர்களின் காதல் கதை என்ன என்பது குறித்து பார்ப்போம்.

ஆசிரியராக இருந்த இந்த நடிகர், மாணவியை 8 வருடங்கள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். இன்று தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஆசிரியராக இருந்தவர், நடிகரானது எப்படி? அவரின் காதல் கதை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
கடந்த 2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலை பாயுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மாதவன். சாக்லேட் பாய் முகம், வசீகரமான தோற்றம் உள்ளிட்ட அம்சங்களால் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். குறிப்பாக இளம் பெண்களின் கவனத்தை ஈர்த்தார் மாதவன்.
அடுத்து ‘மின்னலே’ படத்தின் மூலம் மாஸ் ஆக்ஷன் - லவ் என்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்தார். தொடர்ந்து ‘ஆயுத எழுத்து’, ‘அன்பே சிவம்’, ‘கண்ணத்தில் முத்தமிட்டாள்’ என பல படங்களில் நடித்தவர் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படம் மூலம் இயக்குநராக முத்திரை பதித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் ரூ.1300 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாதவன், சினிமாவில் நுழைவதற்கு முன் ஆசிரியர் வேலை பார்த்துள்ளார். அதாவது எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்தவர், படிப்பை முடித்ததும் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டாராம். ஆனால், பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக, மாணவர்களுக்கு திறன் மேலாண்மை பயிற்சி அளித்து வந்தார்.
அப்படி மகாராஷ்டிரா மாநிலம் கோலலம்பூரில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த மாதவன் அப்போது தான் தன்னுடைய வருங்கால மனைவி சரிதாவை சந்தித்துள்ளார். விமான பணிப்பெண்ணாக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த சரிதா, மாதவனிடம் திறன் மேலாண்மை பயிற்சிக்காக வந்துள்ளார். இந்த பயிற்சி நிறைவடைந்த நிலையில் சரிதா, விமான பணிப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, மாதவனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சரிதா அவரை இரவு உணவிற்கு அழைத்துள்ளார்.
இப்படியாக நிகழ்ந்த மாதவன் - சரிதா சந்திப்பு காதலாக மாறியிருக்கிறது. 8 வருடங்களாக இருவரும் காதலித்த நிலையில், 1991-ம் ஆண்டு இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ஒரு முறை பேட்டி ஒன்றில் மாதவன், “எந்த கணவரும், மனைவியுடன் வாக்குவாதம் செய்து வெல்ல முடியாது” என குறிப்பிட்டிருந்தார். இந்த தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கூலித் தொழிலாளி அடித்துக் கொலை... முறைதவறிய உறவால் நடந்த விபரீதம்...
நாமக்கல்லில் கூலித் தொழிலாளியை பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் உயிரிழந்தார்
முறைதவறிய உறவால் ஏற்பட்ட தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது
கொலை சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
.png)





English (US) ·