Last Updated:May 13, 2026 10:11 AM IST
Madurai Alagar Kovil| 17 கிராம் தங்கமும், 110 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மதுரை அருகே அமைந்துள்ள அழகர் கோவில் பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்யும் முக்கிய ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது.
கள்ளழகரை தரிசனம் செய்த பின்னர், பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்ற நம்பிக்கையில் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக கோவிலின் உண்டியல் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவிலில் உள்ள உண்டியல் காணிக்கைகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். கோவில் நிர்வாக அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் முன்னிலையில் இந்த பணிகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் கோவிலின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில் மொத்தமாக ரூ.1 கோடியே 9 லட்சத்து 43 ஆயிரத்து 54 வசூலாகியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 17 கிராம் தங்கமும், 110 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த காணிக்கைகள் கோவிலின் பராமரிப்பு பணிகள், திருவிழா ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. கோவிலின் நிதி மேலாண்மை முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? | EPF Pension
EPFO கடந்த சில ஆண்டுகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
EPS-95 ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.7,500ஆக உயர்த்த அரசு பரிசீலனை.
ஓய்வூதியம் கணக்கீடு கடந்த 12 மாத சராசரி சம்பளம் பணிக்காலத்தை பொருத்தது.
.png)








English (US) ·