4 Best Indoor Plants to Repel Mosquitoes: மழைக்காலம் ஆனாலும் சரி, வெயில் காலம் சரி இந்த கொசுத்தொல்லை தாங்க முடியாது. வீட்டில் சில செடிகள் இருந்தால் கொசுக்கள் வராது. அவை எந்தெந்த செடிகள்? என்று பார்ப்போம்..
14

Image Credit : AI
கொசுக்களை விரட்ட டிப்ஸ்
வெயில் காலம் வந்தாலே கொசுத் தொல்லை அதிகமாகிவிடும். இந்த கொசுக்கள் வீட்டுக்குள் நுழைந்து நம் தூக்கத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், டெங்கு, மலேரியா போன்ற கடுமையான நோய்களையும் பரப்புகின்றன. பலர் கொசுக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள கடைகளில் விற்கும் Mosquito Repellents-ஐ பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவற்றில் உள்ள கெமிக்கல்கள் நமது உடலுக்கு நல்லதல்ல. சில சமயம், அவற்றை பயன்படுத்தினாலும் கொசுக்கள் போகாது. ஆனால், உங்கள் பால்கனியில் சில செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களை நிரந்தரமாக விரட்டலாம். அவை என்னென்ன செடிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
Add Asianetnews Tamil as a Preferred Source
24
Image Credit : Instagram
துளசி
உங்கள் வீட்டில் துளசிச் செடி இருந்தால், கொசுக்கள் வீட்டிற்குள் நுழைய யோசிக்கும். துளசி இலைகளின் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது. கொசுக்கள் நுழையும் கதவு அல்லது ஜன்னல் அருகே துளசிச் செடியை வைத்தால், கொசுக்கள் வருவது குறையும். அதுமட்டுமல்ல, வீட்டில் துளசிச் செடி இருந்தால் பாசிட்டிவ் எனர்ஜியும் அதிகரிக்கும்.
புதினா
புதினாவின் நறுமண வாசனை கொசுக்களைத் தூரத்தில் வைக்க உதவுகிறது. உங்கள் வீட்டில் ஒரு புதினா செடியை வளர்க்கலாம். இல்லை என்றால், புதினா இலைகளை பேஸ்ட் செய்து ஜன்னல் அருகே வைக்கலாம். இந்த வாசனைக்கு கொசுக்கள் வீட்டிற்குள் நுழையாது.
34
Image Credit : stockphoto
சாமந்திப் பூ
சாமந்திப் பூவின் வாசனையை கொசுக்களால் தாங்க முடியாது. உங்கள் வீட்டு பிரதான வாசல் மற்றும் ஜன்னல்கள் அருகே சாமந்தி செடிகளை நட்டு வைத்தால் போதும். இந்த வாசனைக்கு கொசுக்கள் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்காது.
கற்பூரம், வேப்பிலை
அறையில் கற்பூரத்தை ஏற்றி வைத்தால், அதன் வாசனைக்கு கொசுக்கள் தூரமாக ஓடிவிடும். இது நன்றாக வேலை செய்யும். வேப்ப இலைகளைப் புகை போட்டாலோ அல்லது வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தினாலோ கொசுக்கள் குறையும். வேப்பிலையின் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது.
44
Image Credit : Freepik
வீட்டில் தண்ணீர் தேங்கவே கூடாது
கொசுக்கள் வீட்டிற்குள் வரக்கூடாது என்றால் வீட்டில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமாகும். கூலர்கள், பூந்தொட்டிகளில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சாயங்கால நேரத்தில்தான் கொசுக்கள் அதிகமாக வீட்டிற்குள் நுழையும். எனவே, ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு மெஷ் போட்டுக் கொள்வது நல்லது. குப்பைகள், ஈரமான இடங்கள், மற்றும் மூலைகளில் தூசி அதிகமாக இருந்தால் கொசுக்கள் பெருகும். எனவே, வீட்டை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
.png)
1 hour ago
17





English (US) ·