ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் சனி பகவான் லாப ஸ்தானத்தில் சுயசாரமாக சஞ்சரிப்பதால் குறைந்த உழைப்பும், நிறைந்த வருமானமும் கிடைக்கும். மேலும் குரு பகவான் மற்றும் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பது உங்களுக்கு நன்மைகளையேத் தரும்.
பொதுவான பலன்கள்:
இந்த வாரம் இழுபறிகள் குறையும் வாரமாக இருக்கும். நல்ல பணப்புழக்கம் இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் நீங்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குருவின் பார்வை இருப்பதால் சுப நிகழ்வுகள் நடக்கும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். வாராக் கடன்கள் வசூலாகும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கி உங்களுக்கு சேர வேண்டிய பாகப்பிரிவினைகள் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.
வேலை மற்றும் தொழில்:
தொழிலில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கலாம். இருப்பினும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உண்டு.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தந்தை மகனுக்கு இடையே இருந்த பிணக்குகள் தீர்க்கப்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் ரகசியங்களை பகிர்தல் கூடாது. குடும்ப விவகாரங்களில் மூன்றாம் நபர்களின் தலையீடுகளை தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். குறிப்பாக காது வலி, கணுக்கால், பின் முதுகு ஆகியவற்றில் வலிகள் தோன்றலாம். சிறு உபாதைகளையும் அலட்சியம் காட்டுதல் கூடாது. உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம். வெளி உணவுகளை தவிர்க்கவும்.
கல்வி:
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். உயர்கல்வி கற்க விரும்புவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சந்திராஷ்டம நாட்கள்:
12.2.2026 பகல் 1:42 மணி முதல் 15.2.2026 ஆறு நள்ளிரவு 12:42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். எதிர்முறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரங்கள்:
அஷ்டலட்சுமியை வழிபடுவது பொருளாதார மேன்மையைத் தரும். மகாலட்சுமி தாயாருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம். பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது பழங்கள் வழங்குவது தடைகளை நீக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
.png)
21 hours ago
15






English (US) ·