Last Updated:May 12, 2026 6:41 AM IST
Rain Alert | சென்னையைப் பொறுத்தவரை, இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நான்கு நாட்களுக்கு மிதமான மழையே பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!
5 வயதுக்குட்பட்டோருக்கு குடும்பத் தலைவர் மூலம் பதிவு கட்டாயம்.
நேபாளம், பூட்டான் மக்களுக்கு வழங்கும் ஆதார் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.
போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை.
.png)





English (US) ·