ஆத்தாடி.. வெயில் இப்படி பொளக்குதே.. மழைக்கும் வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!

1 hour ago 19

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெங்கு மழை பெய்யும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 Min read

Published : Mar 01 2026, 10:28 PM IST

14

சில இடங்களில் மட்டும் மழை

Image Credit : Asianet News

சில இடங்களில் மட்டும் மழை

தமிழகம் கோடை காலத்தின் தொடக்கத்தில் உள்ள நிலையில், இப்போதே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. சென்னை முதல் பல்வேறு மாவட்டங்களில் வெயில் போட்டுத்தாக்கி வருகிறது. சில இடங்களில் எப்போதாவது மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவியது.

24

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Image Credit : Asianet News

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைக்குதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது சென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மார்ச் 2ம் தேதி (நாளை) முதல் மார்ச் 3ம் தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

34

மற்ற இடங்களில் மழை பெய்யுமா?

Image Credit : Asianet News

மற்ற இடங்களில் மழை பெய்யுமா?

மார்ச் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

மார்ச் 7ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

44

சென்னையில் எப்படி?

Image Credit : Google

சென்னையில் எப்படி?

மேலும் மார்ச் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து, இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 சென்னையை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read Entire Article