உளவியலையும் தரவுகளையும் கொண்டு வாசனைத் திரவியத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இளம் சிங்கப்பூரர்

1 hour ago 10

f3f59ddd-77e2-4d1a-855d-317a3aa9d9ec

வணிகம் மற்றும் உளவியல் ஆகிய இரண்டிலும் பின்னணி கொண்ட சுவர்ணா வாசனைத் திரவியத் துறையில் தடம்பதித்துவருகிறார். - படம்: சுவர்ணா

சிங்கப்பூரின் ஒன் நார்த் வட்டாரத்தில் அமைந்துள்ள பயோபோலிஸ் மையப்பகுதியில் நுழையும்போது, காற்றில் ஈரப்பதத்தை விட அதிகமானது ஒன்று கலந்திருக்கிறது. அதுதான் உலகளாவிய பயனீட்டாளர் அனுபவங்களின் எதிர்காலம்.

அனைத்துலக நறுமணத் திரவியங்கள் மற்றும் சுவையூட்டிகள் (IFF) நிறுவனத்தில் பணியாற்றும் 24 வயது சுவர்ணா சத்தியவாகீஸ்வரன், ஒரு தனித்துவமான துறையில் வட்டார அளவில் தாக்கத்தை ஏற்படுத்த பல ஆண்டு கால அனுபவம் தேவையில்லை என்பதை நிரூபித்து வருகிறார். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் இரட்டைப் பட்டதாரியான இவர், வெறும் இரண்டே மாதங்களில் ஒரு பயிற்சி ஊழியரிலிருந்து முழுநேர சந்தைப்படுத்தல் ஆய்வாளராக மேம்பாடு கண்டுள்ளார்.

வாசனைத் திரவியத் துறையில் பணிபுரியும் சுவர்ணா  தமது குழுவினருடன்.

வாசனைத் திரவியத் துறையில் பணிபுரியும் சுவர்ணா தமது குழுவினருடன். - படம்: சுவர்ணா

இன்று சந்தைப்படுத்தல், உளவியல் மற்றும் நறுமணம் ஆகிய மூன்றின் சங்கமத்தில் நின்றுகொண்டு, ஆசிய பயனீட்டாளரின் உணர்வுபூர்வமான விருப்பங்களை உலகளாவிய நிறுவனங்கள் புரிந்துகொள்ள இவர் உதவி வருகிறார்.

ஏன் நறுமணத் துறை? பாரம்பரிய சந்தைப்படுத்தலைத் தாண்டிய பார்வை

சுவர்ணா வாசனைத் திரவியத் துறையில் தடம்பதித்துவருகிறார்.

சுவர்ணா வாசனைத் திரவியத் துறையில் தடம்பதித்துவருகிறார். - படம்: சுவர்ணா

பெரும்பாலான சந்தைப்படுத்தல் பட்டதாரிகள் மின்னிலக்க நிறுவனங்களையோ அல்லது பயனீட்டாளர் பொருள்கள் (FMCG) துறையையோ தேர்ந்தெடுக்கும்போது, சுவர்ணா இந்தத் தனித்துவமிக்கத் துறையைத் தேர்ந்தெடுத்தார்.

“ஒரு குறிப்பிட்ட வணிகச் சின்னத்தை மட்டும் மக்களிடம் கொண்டு செல்வதை விட, மனிதர்களை ஆழமாகப் புரிந்துகொள்வதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது,” என்றார் சுவர்ணா.

வணிகம் மற்றும் உளவியல் ஆகிய இரண்டிலும் பின்னணி கொண்ட இவருக்கு, சுவையூட்டி மற்றும் நறுமணத் துறை ஒரு சிறந்த களமாக அமைந்தது. நறுமணம் என்பது வெறும் வாசனை மட்டுமல்ல; அது ஒருவரின் நினைவாற்றல், மனநிலை மற்றும் உணர்ச்சிகளுடன் ஆழமாகப் பின்னிப்பிணைந்தது. அந்த உணர்வுப்பூர்வமான அனுபவங்களை வடிவமைக்கும் வாய்ப்பு அவரது கற்பனையைத் தூண்டியது.

சிங்கப்பூர்: வட்டாரத்தின் கண்டுபிடிப்புகளின் மையப்புள்ளி

IFF நிறுவனத்தின் ஆசிய வட்டாரத் தலைமையகமாக சிங்கப்பூர் திகழ்கிறது. சுவர்ணா பணியில் சேர்ந்த காலகட்டத்தில், IFF நிறுவனத்தின் சிங்கப்பூர் கண்டுபிடிப்பு மையத்தில் புத்தாக்க முறையிலான மூழ்கவைக்கும் அனுபவ மையம் தொடங்கப்பட்டது. இது ஒரு சாதாரண அலுவலகம் அல்ல; பிரதான வாடிக்கையாளர்களுக்கு நறுமணத்தின் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் ஒரு மின்னிலக்கப் பன்முக உணர்வுத் தளமாகும்.

சுவர்ணா பணியில் சேர்ந்த காலகட்டத்தில், IFF நிறுவனத்தின் சிங்கப்பூர் கண்டுபிடிப்பு மையத்தில் புத்தாக்க முறையிலான மூழ்கவைக்கும் அனுபவ மையம் தொடங்கப்பட்டது.

சுவர்ணா பணியில் சேர்ந்த காலகட்டத்தில், IFF நிறுவனத்தின் சிங்கப்பூர் கண்டுபிடிப்பு மையத்தில் புத்தாக்க முறையிலான மூழ்கவைக்கும் அனுபவ மையம் தொடங்கப்பட்டது. - படம்: சுவர்ணா

தனது ஆர்வம் நிறைந்த, துடிப்புமிக்க மனப்போக்கின் மூலம் சுவர்ணா பின்வரும் மாற்றங்களை முன்னெடுத்து வருகிறார்:

  1. அனுபவ நுண்ணறிவு: வெறும் புள்ளிவிவர அறிக்கைகளாகத் தராமல், சந்தை மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்கு ஒரு 360-டிகிரி முழுமையான அனுபவமாக மாற்றுகிறார்.
  2. வட்டார அளவிலான கண்ணோட்டம்: சிங்கப்பூரில் இருந்துகொண்டே ஆசியா முழுவதிலும் உள்ள பயனீட்டாளர் போக்குகளைக் கண்காணிக்கிறார். “உண்மையான கண்டுபிடிப்பு என்பது உலகளாவிய போக்கைப் பின்பற்றுவது மட்டுமல்ல, மக்களின் சூழலைப் புரிந்துகொள்வதாகும்” என்பது இவரது நம்பிக்கை.
  3. பன்முக உணர்ச்சிக் கதைசொல்லும் பாணி: நவீன பயனீட்டாளர் பார்வை, வாசனை, சுவை மற்றும் தொட்டுணர்தல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஓர் அனுபவத்தையே நாடுகிறார்கள் என்பதை இவர் சுட்டிக்காட்டுகிறார்.

“ஸ்பாஞ்ச்” மனநிலை: சவால்களைக் கடந்து வெற்றி

ஒரு சிறப்பு வாய்ந்த B2B எனும் வர்த்தகங்களுடன் வணிகம் புரியும் துறையில் நுழைவது சவாலானது. ஆனால், சுவர்ணாவின் விரைவான வளர்ச்சிக்குக் காரணம் எதையும் உள்வாங்கிக்கொள்ளும் “ஸ்பாஞ்ச்” (Sponge) போன்ற அவரது மனநிலைதான்.

சுவர்ணா வாசனைத் திரவியத் துறையில் தடம்பதித்துவருகிறார்.

சுவர்ணா வாசனைத் திரவியத் துறையில் தடம்பதித்துவருகிறார். - படம்: சுவர்ணா

“பயிற்சி ஊழியராக இருந்தபோது முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல், கொடுக்கப்பட்ட ஒவ்வொரு வேலையிலும் எனது சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தேன்,” என்று அவர் கூறுகிறார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் மற்றும் ஜெர்மனியின் மியூனிக் ஆகிய நகரங்களில் அவர் மேற்கொண்ட கல்விப் பயணங்கள், சிக்கலான தரவுகளை ஆய்வு செய்யவும் பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அவருக்கு உதவின.

எதிர்காலப் பாதை

நறுமணத் துறையில் நுழைய விரும்பும் இளம் சிங்கப்பூரர்களுக்கு சுவர்ணா கூறும் ஆலோசனை இதுதான்.

“இப்போது இத்துறை மின்னிலக்க மாற்றம் மற்றும் புத்தாக்கத்தின் உச்சத்தில் உள்ளது. தொழில்நுட்பத் திறன்கள் அடிப்படை என்றாலும், மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக்கொள்ளும் தன்மையும், கற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுமே ஒருவரைத் தனித்துக்காட்டும்.”

சிங்கப்பூர் உலகளாவிய கண்டுபிடிப்புகளின் மையமாகத் தொடர்ந்து வளர்ந்து வரும் வேளையில், சுவர்ணா போன்ற இளம் வல்லுநர்கள் நறுமணத்தின் வழியே புதிய சரித்திரத்தைப் படைத்து வருகிறார்கள்.

Read Entire Article