சனி பூஜைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - மறுத்த பெண், உறவினரை கொன்ற மந்திரவாதி

1 day ago 8

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள நிஜாம்பூர் ஜெய்தானே என்ற பகுதியில் வசிப்பவர் யோகேஷ் கெய்ர்னார். இவர் பில்லி சூனியம் வைக்கக்கூடிவராக அறியப்படும் ஒரு மந்திரவாதி.

இவர் சொந்தமாக ஒரு கோயில் நடத்தி வருகிறார். அவரது கோயிலுக்கு பக்தர்கள் பூஜை மற்றும் பில்லி சூனியம் வைக்க வருவதுண்டு. நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 33 வயது பெண் அமாவாசைக்கு சனிபூஜை செய்ய வேண்டும் என்று கூறி யோகேஷிடம் வந்தார்.

யோகேஷ் சனிபூஜையை நடத்தினார். அதன் பிறகு அப்பெண்ணை தான் வீட்டில் விட்டுவிடுவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். ஆனால் வாகனத்தில் செல்லும்போது யாரும் இல்லாத இடத்தில் வானகத்தை நிறுத்திவிட்டு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண் சண்டையிட்டதோடு கத்தி கூச்சலிட்டார். இதனால் பயந்து போன யோகேஷ் அப்பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சென்றுவிட்டார்.

இதனிடையே, கோயிலுக்கு அப்பெண்ணை தேடி ஒருவர் வந்தார். கோயிலுக்கு மிகவும் தாமதமாக யோகேஷ் இடம் அப்பெண் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யோகேஷ் அந்த நபரையும் கட்டையால் அடித்து கொலை செய்தார்.

கொலை செய்யப்பட்ட பெண் சாலையோரம் கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் அப்படியே இருந்தது. தகவல் அறிந்து வந்த போலீஸார் அப்பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் கொலை செய்தவர் கோயிலுக்கு சென்று இருந்தது தெரிய வந்தது. உடனே கோயிலுக்கு வந்து யோகேஷிடம் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதோடு அப்பெண்ணுடன் வந்த நபர் குறித்து கேட்டதற்கு அவரையும் அடித்து கொன்றதாகவும், அவரை தனது தோட்டத்தில் புதைக்க ஏற்பாடு செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து யோகேஷ் கைது செய்யப்பட்டார்.

Read Entire Article