தவெக: ``திரைமறைவு பேரமா? விஜய் அடுத்த எம்.ஜி.ஆரா? ஆட்சியில் பங்கு?" - திருமாவளவனின் 'பளீச்' பதில்கள்

14 hours ago 14

விசிக மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து திருமாவளவன் விளக்கமளித்திருக்கிறார்.

Published:Just NowUpdated:Just Now

திருமாவளன்

திருமாவளன்

தவெக ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், விசிக கட்சிகளின் ஆதரவை தவெக தலைவர் விஜய் கோரியிருந்தார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகே மூன்று கட்சிகளும் தங்கள் ஆதரவை வெளியிலிருந்து தெரிவிப்பதாக அறிவித்தன.

இந்த நிலையில், திரைமறைவில் விசிக பேரம் பேசியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுகுறித்து விளக்கமளிக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ``மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்கினோம்.

திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா

திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா

இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக வதந்திகள் பரவின. நாங்கள் தி.மு.க கூட்டணியில் அங்கமாக இருந்துதான் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பல்வேறு போராட்டக் களங்களில் பயணித்திருக்கிறோம். எனவே, ஒருவேளை திமுக ஒரு முன்மொழிவை வைத்தாலும், அதை எங்களால் புறந்தள்ளிவிட முடியாது.

அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. அமைச்சரவையில் இடம்பெற்றால், அது திமுக கூட்டணியை விட்டு முற்றாக வெளியேறுவதாகக் கருதப்படும். இது ஒரு கொள்கை ரீதியான முடிவு என்பதால், விவாதிப்பதற்கு எங்களுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது.

அதற்குள் திரைமறைவுப் பேரம் நடப்பதாக வதந்திகள் பரவின. அப்படி எதுவும் நடக்கவில்லை. கட்சித் தொண்டர்கள் இப்போதும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்துத் தொடர்ந்து விவாதித்து வருகிறோம்.

முதல்வர் விஜய் என்னைச் சந்திக்கவிருப்பதாகத் தெரியவருகிறது. முதல்வர் உடனான சந்திப்பின்போது இத்தகைய கோரிக்கைகளை முன்வைக்க மாட்டோம். அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இருக்கும்.

சட்டசபையில் விஜய்யை அடுத்த எம்.ஜி.ஆர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் இருந்த இடத்திற்கு விஜய் வந்திருக்கிறார் என்பதை மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் நான் பார்க்கிறேன். மக்கள் அவருக்கு அத்தகைய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read Entire Article