அதிகாரத்தின் வலு என்னவென்பதை காட்டும் வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது தலைமைச் செயலக நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள்.
Published:Just NowUpdated:Just Now

தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று கோட்டைக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் திமுக சார்பு பணியாளர்களையும் அதிகாரிகளையும் உடனடியாக வேறு வேறு இடங்களுக்கு மாற்றுமாறு முதல்வர் அலுவலகம் கறார் உத்தரவு பிறப்பித்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

விஜய்
ஒரு புதிய ஆட்சி அமைந்தவுடன், பழைய ஆட்சியின் அரசியலர்களுடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளையும் பணியாளர்களையும் இடமாற்றம் செய்வது வழக்கமே. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளின் ஆட்சியின் போதுமே இது நடக்கும். அதே வழக்கத்தை இப்போது தவெக ஆட்சியிலும் கடைப்பிடித்திருக்கின்றனர்.
தலைமைச் செயலகத்தில் திமுக அமைச்சர்களின் கீழ் பணியாற்றிய பி.ஏ தொடங்கி ஆபிஸ் அசிஸ்டண்ட் வரைக்கும் அத்தனை பேரையும் வேறு வேறு துறைகளுக்கு வேறு வேறு அதிகாரிகளின் கீழ் பணியாற்ற இடமாற்றியிருக்கின்றனர்.
திமுகவுக்கு நெருக்கமான திமுகவினருடன் தொடர்பில் உள்ள பணியாளர்கள் யாரும் அப்படியே தொடரக்கூடாது என முதல்வர் அலுவலகத்தில் இருந்து வந்த கறார் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதென தலைமைச் செயலக வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். மேலும், இப்போது உள்ள அமைச்சர்களுக்கு கடந்த ஆட்சியில் பணியாற்றிய சில முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியாளர்களை மாற்றி வழங்கியிருக்கின்றனர்.

விஜய்
முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர் பொறுப்பேற்றிருக்கின்றனர். அவர்களுக்கான துறை இன்னும் ஒதுக்கப்படவில்லை. அதனால் துறைமாற்றம், பதவி உயர்வு, இடமாற்றம் என எதிர்பார்க்கும் காவல்துறை அதிகாரிகளும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அமைச்சர்களை தங்களின் புரொபைல் பைலோடு சந்தித்து வணக்கம் வைத்து வருகின்றனர்.
அதிகாரத்தின் வலு என்னவென்பதை காட்டும் வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது தலைமைச் செயலக நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள்.!
.png)





English (US) ·