நீட் தேர்வு ரத்து - தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்
Published:9 mins agoUpdated:9 mins ago

வினாத்தாள் கசிந்ததால், கடந்த 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"#NEET – Never Been Neat: இந்த ஆண்டும் NEET வினாத்தாள் லீக் முறைகேடுகள் வெளிவந்து, எக்ஸாம் கேன்சல் ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.

நீட் தேர்வு
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல ஸ்கேம் இல்ல, நீட்டே ஒரு ஸ்கேம் -தான்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் தாமதம், மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி ப்ளஸ் டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்".
#NEET â Never Been Neat:
à®à®¨à¯à®¤ à®à®£à¯à®à¯à®®à¯ #NEET Paper Leak à®®à¯à®±à¯à®à¯à®à¯à®à®³à¯ வà¯à®³à®¿à®µà®¨à¯à®¤à¯, Exam Cancel à®à®à®¿à®¯à®¿à®°à¯à®à¯à®à¯. à®à®²à®à¯à®à®à¯à®à®£à®à¯à®à®¾à®© மாணவரà¯à®à®³à¯ மன à®à®³à¯à®à¯à®à®²à¯à®à¯à®à¯ à®à®³à®¾à®à®¿à®¯à®¿à®°à¯à®à¯à®à®¾à®à¯à®.
à®à®°à¯ தà¯à®°à¯à®µà®¿à®©à¯ à®à®µà¯à®µà¯à®°à¯ பà®à®¿à®¨à®¿à®²à¯à®¯à®¿à®²à¯à®®à¯ à®®à¯à®à®à®¿ நிறà¯à®¨à¯à®¤à®¤à®¾à®à®µà¯ நà¯à®à¯ à®à®°à¯à®à¯à®à¯. நான௠தà¯à®à®°à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®²à¯à®²à®¿ வரà¯à®µà®¤à¯à®ªà¯à®², நà¯à®à¯à®² Scam à®à®²à¯à®²,⦠pic.twitter.com/WilwYRPhmV
.png)





English (US) ·