Last Updated:Feb 22, 2026 12:23 PM IST
‘மாயாவி’ படத்தில் நடித்த துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொடைக்கானல் அருகே மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மாயாவி’ படத்தில் நடித்த துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொடைக்கானல் அருகே மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூர்யா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘மாயாவி’. சிங்கம் புலி இயக்கிய இந்தப் படத்தில் ஜோதிகா நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் சிகப்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் துணை நடிகை விஷ்ணு பிரியா. ‘கடவுள் தந்த அழகிய வாழ்வு’ பாடலில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது தந்தை மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘மாயாவி’ பட நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகே உள்ள தனியார் பங்களாவில், வசித்து வந்துள்ளார். சுற்றுலா பயணிகள் போல அவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், அவரது தந்தையின் முகம் மற்றும் உடல் பகுதியில் டேப் வைத்து கட்டியவாறு சேரில் அமர வைத்து கொலை செய்துள்ளனர்.
மேலும், கொலையாளிகள் சிசிடிவி தடயங்களை சேதப்படுத்தி தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தினார்.
First Published :
Feb 22, 2026 12:23 PM IST
.png)


English (US) ·