மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஹோலிக்கு முன் அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம். அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, ஊழியர்கள் உயர்த்தப்பட்ட சம்பளத்துடன் நிலுவைத் தொகையையும் பெறுவார்கள்.
15

Image Credit : our own
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்பே மகிழ்ச்சியான செய்தி வர வாய்ப்பு உள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு நேரடியாக ஊழியர்களின் சம்பளம் மற்றும் வங்கிக் கணக்கில் வரவு சேரும் தொகையை அதிகரிப்பதால், பலருக்கும் இது பெரிய நிம்மதியாக இருக்கிறது.
25
Image Credit : stockPhoto
சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 58 சதவீதமாக வழங்கப்படும் டிஏ, 2 சதவீதம் உயர்ந்து 60 சதவீதமாக மாறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும். அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த பிறகு, உயர்த்தப்பட்ட சம்பளத்துடன் கடந்த மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் (பாக்கி) ஒரே நேரத்தில் வழங்கப்படும்.
35
Image Credit : Gemini
ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய அப்டேட்
இந்த டிஏ உயர்வு கணக்கீடு, தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு (CPI-IW) அடிப்படையில் உள்ளது. 2025 டிசம்பர் மாத குறியீடு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது மாற்றமின்றி நிலைத்திருந்ததால், இந்த முறை 2% உயர்வே சாத்தியம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் அதிக உயர்வை எதிர்பார்த்தாலும், தற்போதைய தரவுகள் அதற்கு இடமளிக்கவில்லை.
45
Image Credit : stockPhoto
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்
மார்ச் 2026 தொடக்கத்தில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த முடிவை அங்கீகரிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. அப்படி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், ஹோலி பண்டிகைக்கு முன் கிடைக்கும் சம்பளத்தில் உயர்த்தப்பட்ட டிஏ தொகையும், ஜனவரி மாதத்திற்கான நிலுவைத் தொகையும் சேர்ந்து வரக்கூடும். இது ஊழியர்களுக்கு “இரட்டை பரிசு” போல இருக்கும்.
55
Image Credit : stockPhoto
7வது ஊதியக் குழுவின் பரிந்துரை
இந்த டிஏ உயர்வு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. 8வது ஊதியக் குழு தொடர்பாக இன்று எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, 7வது ஊதியக் குழு முடிவடைந்த பிறகான முதல் டிஏ திருத்தமாக இது பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், இந்த உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ச்சியான நிதி நிம்மதியை அளிக்கும் ஒரு முக்கிய அப்டேடாக இருக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
.png)
21 hours ago
14






English (US) ·