இந்த வெற்றியின் மூலம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்துள்ளது.
Published:4 mins agoUpdated:4 mins ago
ஐபிஎல் தொடரில் இன்று (மே 10) நடைபெற்ற சென்னை vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டி என்றே சொல்ல வேண்டும்.
அவ்வளவு நெருக்கமாக விளையாடி ஒரு அபார வெற்றியைப் பெற்றுள்ளது சென்னை அணி. இந்த வெற்றியின் மூலம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்துள்ளது.

CSK vs lag match
வெற்றிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ருதுராஜ், "ஆட்டம் சற்று நெருக்கமாகத்தான் சென்றது. ஆனால் 200 ரன்களைத் துரத்தும்போது, ஆட்டம் எப்போதும் கடைசி ஓவர்கள் வரை செல்லும் என்பது எங்களுக்குத் தெரியும்.
லக்னோ அணியின் ஜோஷ் ஆடிய விதம் வியக்கத்தக்கது. அவரது அதிரடி ஷாட்களுக்கு எங்களிடம் பதில் இல்லை. அவருக்கு எதிராகத் திட்டம் தீட்டுவதோ அல்லது ஃபீல்டிங் அமைப்பதோ சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது.

ருதுராஜ் கெய்க்வாட்
ஆனால் 6 முதல் 10 ஓவர்களில் நூர் மற்றும் ஜேமி சிறப்பாகப் பந்துவீசி ஆட்டத்தை மீட்டெடுத்தனர்.
அவர்கள் விளையாடிய விதத்தைப் பார்த்தபோது 240 அல்லது 250 ரன்கள் வரும் என்று தோன்றியது. ஆனால், பந்துவீச்சாளர்களின் முயற்சியால் அவர்களை 200-க்குள் சுருட்டியது பாராட்டுக்குரியது." என்றார்.
.png)








English (US) ·