வருமான வரிக் கணக்குத் தாக்கல் - முழு விவரம் - A to Z
Published:16 mins agoUpdated:16 mins ago

'குறைவாக தான் வருமானம் வாங்குகிறேன்... நான் ஏன் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்? செய்யாமல் போனால் என்ன தவறு?' - இப்படி பல கேள்விகள் நம்மிடையே இருக்கிறது.
"இந்தியாவில் அனைத்து வருமானதாரர்களுக்குமே ஸ்லாப்கள் உள்ளது. அதனால், வருமான வரித் தாக்கல் செய்வது அவசியம்.

ஆடிட்டர் கிரி பாபு
'நான் வருமான வரி செலுத்த வேண்டாம்' என்று நாம் தான் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், மறைமுகமாக எங்கேயாவது நமக்கு வரி பிடித்தம் செய்யப்பட்டிருக்கும்... வரிக் கட்டியிருப்போம்.
உதாரணத்திற்கு, வங்கியில் இருந்து நமக்கு வட்டி வந்திருக்கலாம்... ஏதேனும் ஒரு சொத்தை விற்றிருப்பீர்கள்... அதற்காக TDS பிடித்திருப்பார்கள். அதனால், அப்போதே நாம் வருமான வரிக் கணக்கின் கீழ் வந்துவிடுவோம்.
அதனால், எப்போதுமே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவது நல்லது.
அடுத்ததாக, கடன் வாங்கும்போதும், வெளிநாடுகளுக்கு செல்லும் போது, வருமான வரிக் கணக்குத் தாக்கலைக் கேட்பார்கள். அதற்காக கடைசி நேரத்தில் அலையாமல், ஆரம்பத்தில் இருந்தே பக்காவாக வைத்துக்கொள்வது நமக்கு தான் நன்மை.
அரசு வேலையில் இருக்கும் பலரும், எனக்கு அரசாங்கம் வரிக் கட்டிவிடும். நான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய தேவையில்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு. அரசாங்கம் யாருக்காகவும் வரிக் கட்டாது. அவரவர் வரியை அவர்கள் தான் கட்ட வேண்டும்.
உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் கூட இருந்திருக்கலாம். கணக்குத் தாக்கல் செய்யாததால், அது உங்களுக்கு திரும்ப கிடைக்காமலே போய்விடும். அதனால், முன்பே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவது நல்லது".
.png)





English (US) ·