Last Updated:Feb 08, 2026 7:00 AM IST
Weather Udpate | தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் தேதி வரை மழை இல்லை, 9 மாவட்டங்களில் அதிகாலை பனிமூட்டம் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதி வரை வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பனிமூட்டம் நீட்டிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், 9 மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி வரை அதிகாலை வேளையில் பனிமூட்டம் நீடிக்கும் என தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் நிலவும் என குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 11-ஆம் தேதி வரை அதிகபட்ச இயல்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன?
இந்தியா-அமெரிக்கா இடைக்கால ஒப்பந்தத்தில் வரி குறைப்பு, தொழில்துறை விலக்கு அம்சங்கள் உள்ளன
500 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்கா எரிசக்தி, தொழில்நுட்ப பொருட்கள் இந்தியா வாங்க ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் வேலைவாய்ப்பு, மேக் இன் இந்தியா, விவசாயிகள், தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்கு உதவும்
.png)







English (US) ·